Saturday, July 28, 2007
நிலாரசிகன் பக்கம்.....
திருக்குறள் ஒரு கண்ணோட்டம் (2)
இறைமை.:
உலகில் அறநூல்கள் என்பன எல்லா மொழிகளிலும் எண்ணிலடங்காத வகையில் நிறைய இயற்றப் பட்டுள்ளன. பொதுவாக எந்தவொரு அற நூலும் அதை இயற்றிய படைப்பாளி சார்ந்திருக்கும் சமயத்தையும் அந்த சமயம் வழிபடும் முழுமுதல் கடவுளையும் அவர்களது சமயக் கோட்பாடுகளை எங்ஙனம் ஒழுக வேண்டும் என்பதுவும் தான் போதிக்கப்படுபவையாக இருக்கும். எந்தவொரு குறிப்ப்பிட்ட சமயச் சர்ர்புமற்ற பொதுமறையாக இயற்றப்பட்ட அறநூல்கள் என்பவை மிக மிக மிக அரிது என்றே கூறலாம். அத்தகைய அரிய நூல்களில் மேன்மையானதும் , முதன்மையானதும் தான் எம்பிரான் திருவள்ளுவனார் இயற்றிய திருக்குறள் ஆகும்.
எந்தச் சமயத்தைச் சார்ந்தவராகா இருப்பினும் அவருக்கு ஏற்ற மாதிரியான பொதுமைக் கருத்துக்களையும் ஒழுகு முறைகளையும் கூறுவது தான் குறளின் சிறப்பு மகிமை என்றால் அது மிகையாகாது.
கடவுள் பற்றிய நம்பிக்கைகள் , கொள்கைகள் , கோட்பாடுகள் மதத்துக்கு மதம் முரண்படவும் , காலத்துக்கேற்றவாறு மாறுபடவும் கூடும். சில தருணங்களில் புது புது சமயங்களும் , விதம் விதமான புது அர்த்தங்களும் கூட உருவாகும்.
ஆனால் திருக்குறளில் திருவள்ளுவர் அருளிய இறைமை அல்லது இறைக் கோட்பாடு, கொள்கை , வழுதல் என்பன எந்தவொரு கால வரையறைகளாலும் , தேசப்பரப்புகளின் எல்லைகளாலும், சூழல் , மொழி, மத முரண்பாடுகளினாலும் , எந் நிலையிலும் பாதிப்படையாத உயரிய கோட்பாடுகளை உரைப்பதாயுள்ளது.
அதாவது.....
இறை என்றால் எங்கும் பரந்த என்ற பொருள் கொள்ளலாம். அல்லது தங்குதல் , எங்கும் நிறைதல் (Immanence) என்னும் பொருள் பட நோக்கின் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த ஒரு பரம்பொருளின் செறிவையே கடவுள் அல்லது இறைமை என்ற பொருள்படும். மற்றும் இறைமைக்கு தலைமை அல்லது மேலிடம் அல்லது மேன்மையான என்றும் தெய்வாம்சம் , அரசாட்சி, கடவுள், பரப்பு என்றும் சொல்லலாம். ஆனால் சமயங்களையும் சமயவாதிகளையும் பொறுத்தவரை இறைமை என்பது அந்தந்த சமயங்களுக்குரிய முழுமுதற் கடவுளையே குறிக்கின்றன.
காலத்துக்குக் காலம் சமயவாதிகளும் , வேறு பலரும் இறைமை பற்றிய கருத்துக்களையும் , வரைவிலக்கணங்களையும் மாற்றியும் , திரித்தும், முரண்பட்டும் கூறி வந்துள்ளனர். ஆனால் வள்ளுவனாரின் திருக்குறள் ஒன்று தான் இறைமையின் பண்பை உலகமுழுவதுக்கும் உரித்தான எல்லா மதக் கொள்கைக்கும் ஏற்ற வாறாய் பொருந்தத் தகுந்த முறையில் சித்தரிக்கின்றது என்றால் மிகையாகாது.
இறைவன் என்று உருவமில்லாத ஒரு அருவமான பரமாத்மாவையே உலகிலிருக்கும் அத்தனை மதங்களும் சுட்டுகின்றன. "கடவுள்" என்ற பதத்தில் குறிப்பிடப்படும் பரமாத்மா காணுதற்கரியவன், கை தொடாத தூரத்தவன், புலனறியா புதிரானவன்; அவன் மெய்யறிய வேண்டும் எனில் நீ வையகப் பற்றறுத்தாக வேண்டுமென்ற நிபந்தனை கொண்டவன்... இப்படிப் பட்ட கோட்பாடுகளைக் கொண்ட சமயவாதிகளின் அற நெறி நூல்களைப் புறம் தள்ளும் வண்ணம் வள்ளுவர் தன் குறளில் இறைமையின் பண்புகளை இல்லற மாண்பில் கணவன் மனைவிக்குமிடையிலும், காதலில் காதலனுக்கும் காதலிக்கும் இடையிலும் அரசாட்சியில் அரசனுக்கும் மக்களுக்குமிடையிலும், மனிதனின் சிந்தனைத் திறனிலும் , செயல் நேர்மையிலும், வினைத் திட்பத்திலும், பெண்ணின் கற்பு நெறியிலும், தோழனின் நட்பிலும் காட்டுகின்றார்.
இது அவரது முற்போக்கு சிந்தனையின் பரந்த அறிவு ஞானத்தைக் காட்டுகின்றது என்றே சொல்ல வேண்டும்.
இங்ஙனம் பல மேன்மைகளையுடைய திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் பத்து (10) குறள் வீதம் நூற்றி முப்பத்தி மூன்று (133) அதிகாரங்களில் ஆயிரத்தி முன்னூற்றி முப்பது (1330) குறள்களை கொண்டுள்ளது என்று முன்பு பார்த்தோம்.
இந்த நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்களும் அறத்துப் பால், பொருட்பால் , இன்பத்துப்பால் என்று மூன்று முக்கிய பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. அந்த முக்கிய பிரிவுகள் தமக்குள் சில உட்பிரிவுகளால் வகுக்கப்பட்டுள்ளன.
அவையாவன அறத்துப் பால் பாயிரம், இல்லறவியல், துறவியல், ஊழியல் என நானகு உட்பிரிவுகளையும் பொருட்பால் அரசியல் , அங்கவியல், ஒழிபியல் என மூன்று உட்பிரிவுகளையும் இன்பத்துப்பால் கற்பியல் , களவியல் என்ற இரண்டு உட்பிரிவுகளையும் கொண்டன.
அடுத்து நாம் திருக்குறளின் அறத்துப் பாலின் பாயிரவியல் என்னும் உட்பிரிவின் நான்கு அதிகாரங்களின் சிறப்பினை பற்றி பார்க்கலாம்..
திருக்குறள் ஒரு கண்ணோட்டம்
சங்க இலக்கியம் அற இலக்கியம் சமய இலக்கியம் சிற்றிலக்கியம் தற்கால இலக்கியம்.
இவற்றுள் சங்க இலக்கியமும் அற இலக்கியமும் தலை சிறந்தவையாகவும் மேன்மையானவையாகவும் கருதப்படுகின்றன. இவற்றில் அற இலக்கியங்களில் மேன்மையானதும் முதன்மையானதுமாகக் கருதப்படுவது திருவள்ளுவப் பெருமானால் இயற்றப்பட்ட திருக்குறள் அன்றி வேறில்லையெனலாம்.
மனிதனுக்கு "ஒழுக்கம்" என்பதே முதன்மையான , தேவையான சிறப்பியல்பு அல்லது பண்பு எனக் கொள்ளலாம். ஒழுகு என்ற மூலச் சொல் அல்லது வேர்ச் சொல்லிலிருந்து தோன்றிய பதம் தான் "ஒழுக்கம்" என்பது. ஒழுகு என்பது நட என்னும் பொருள் சுமந்தது. எனவே ஒழுக்கம் என்பதுவும் நடத்தையையே - நல் நடத்தையையே குறிப்பதாகக் கொள்க. ஆகவே நன் நடத்தையாகிய ஒழுக்கம் என்பதை உணர்த்துவதே 'அறம்' என்னும் நெறி எனக் கொள்ளலாம்.
சங்க காலத்தில் இலக்கியங்கள் மக்களுடைய வாழ்கையின் அடிப்படையை வைத்து அக இலக்கியம் , புற இலக்கியம் என வகைப்படுத்தப்பட்ட பிரிவுகளாக இயற்றப்பட்டன. புறப் பொருளில் ஒன்றான அறத்தின் சிறப்பைக் கூறும் அற நூல்களை அடுத்த நிலையில் படைத்தனர். இவை அமைப்பு முறையாலும், சொல்லப்படும் கருத்துகளாலும் தனி இலக்கிய வகையாக உருவாகியது. இவற்றை "அற நூல்கள்" என்றழைத்தனர்.
வாழ்கை நெறிக் கொள்கைகளை முழுமையாக விளக்கும் அற நூல்கள் படைக்கப் படும் முன்னதாகவே வழக்காற்று ஒழுக்க நெறிகளை (Customary Morality ) கூறும் - மக்களின் அன்றாட வாழ்கையில் பின்பற்றும் ஒழுக்க நெறிகளை விளக்கும் இலக்கியங்கள் தோன்றியிருந்தன. இவற்றை மூதுரை என்றோ முது மொழி என்றோ அல்லது பழமொழி என்றோ அழைக்கப்பட்டன. காலப் போக்கில் அறிவின் பரிணாம வளர்ச்சியின் பயனாக அவற்றில் இருந்து வேறுபட்ட கருத்துச் செறிவும் , வாழ்கைத் த்த்துவங்களும் கொண்ட அற நூல்கள் உருவாகின. இவை மூதுரைகளிலிருந்து வேறுபட்டு சொல்லப்பட்ட கருத்துகளுக்கும் தத்துவங்களுக்கும் முக்கியத்துவமளிப்பவையாயிருந்தன எனக் கொள்ளலாம்.
காலத்தால் முந்திய மூதுரையோ , முது மொழியோ அல்லது பழ மொழியோ வழி வையாக வரும் மனித வாழ்வின் பழக்க வழக்கங்களை சுருந்கிய வடிவத்தில் அதாவது ஒரிரு வரிகளில் நயமுறச் சொல்லபவை. இவற்றை விரிவாக்கி ஒரு வரையறை எல்லகளுக்குட்படுத்திக் கூறுபவை தான் அற நூல்களாகும்.
அற நூல்களில் ஒழுக்கம் என்பதையே பிரதானமான கருத்தாகக் கொண்டு எவையெவற்றை செய்யலாம் , எதெதெதை செய்யக்க் கூடாது என்ற வாழ்வியல் நிபந்தனைகளாக பரிணமித்திருக்கும். அற நூல்களை நோக்கும் போது அவற்றின் படைப்பாளிகள் தாம் போதிக்க விரும்பிய கருத்தை வலியுறுத்த மட்டுமே முயன்றிருப்பது தெரியும். கவிதை இலக்கியங்களின் இலக்கணங்களான கற்பனையிலோ அழகியலிலோ (Aesthetics) அவர்கள் கவனம் காட்டாதது குறிப்பிடப்படவேண்டிய விஷயம். அவர்களின் படைப்புகளில் முக்கியமாக கருவாக வழக்காற்று ஒழுக்க நெறி மட்டுமே அடிப்படையாய் அமைந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. அவற்றில் மனித சமூகம் முழுமைக்கும் பயன் தரக்கூடிய அறத்தின் உட்கருத்துக்கள் அருகியே காண்ப்படும்.
ஆனால் "திருக்குறள்" என்ற அரும் பெரும் தமிழ் இலக்கியமானது இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையிலும் , வேறுபட்ட தரத்திலுமிருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. திருக்குறளை அற நூலில் சேர்ப்பதைப் பார்க்கிலும் வாழ்வு நூலாகக் கணிப்பதே சாலப் பொருந்தும். ஏனெனில் அறநூல்களில் பெரும்பான்மையானவை மத சார்பான அற் நெறிகளையும், வழிமுறைகளையுமே வாழ்வியலின் நிபந்தனைகளாகவும் விதிகளாகவும் போதிக்கின்றன. ஆனால் திருக்குறள் என்ற இலக்கியம் மாத்திரமே அற நூலாகவுமிருந்து கொண்டே அதையும் கடந்து தனக்கென்று தனித்தன்மைகளையும் புதுமைகளையும் தன்னகத்தே கொண்டது.
திருக்குறளின் அடித்தளம் தமிழர் பண்பாடாக இருந்த போதும் கூட , குறிப்பிட்ட ஒரு நாட்டவர் என்றோ அல்லது குறிப்பிட்ட இனத்தவர் என்றோ, அதுவுமல்லாது இன்ன, மொழி பேசுபவர், அல்லது இந்த
மதம் சார்ந்தவர், என்ற எல்லகளைக்குட்படாமல் உலகின் எந்தவொரு மூலையில் இருக்கும் எப்படிப்பட்ட ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் பொருந்தக் கூடிய வாழ்வியல் சிறப்புகளைக் கூறும் ஒரு நூலாகவே இருக்கின்றது.
இந் நூலுக்கு திருக்குறள் என்ற பெயர் வரக் காரணம் யாதெனில்..; திரு என்பதன் அர்த்தம் நாம் யாவரும் அறிந்தது போல் உயரிய, மேன்மை தகுந்த , சிறப்பான, செல்வம், அழகு, என்று பொருள்படும். சிறாந்த படைப்புகளையும் , மேன்மக்களையும் திரு என்ற அடை மொழியிட்டு அழைப்பது வழக்கம். திரு ஞான சம்மந்தர், திரு நாவுக்கரசர், திருமூலர், திருமந்திரம், திருமறை என்பன அதற்ற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். அதே போல் தமிழில் வெண்பா யாப்பிலக்கணத்தில் மிகச் சிறிய , குறுகிய வெண்பாவை குறள் வெண்பா என்றழைப்பர். ஆதலால் மிகக் குறுகிய வெண்பாக்களைக் கொண்ட மேன்மையான உன்னதமான நூல் என்ற சிறப்பினைக் கருதி இந்நூலுக்கு திருக் குறள் என்ற பெயரிடக் காரணமானது.
திருக்குறள் :
அறம் , பொருள் , இன்பம் என்ற மூன்று உட் பிரிவுகளைக் கொண்டது.
அறம் எனப்படும் பிரிவு அறத்துப் பால் என்றும் அழைக்கப்படும். இது அற நெறியின் பெருமையையும் மேன்மையையும் அதன் பயன்களையும் எடுத்துரைக்கின்றது.
பொருள் எனப்படும் பொருட்பால் பொருளின் சிறப்பையும் , அதை எப்படி சேமிப்பது ,காப்பது, பங்கிடுவது, பகிர்வது என்ற முறைமைகளையும் சொல்லுகிறது. இதில் அரசியல் நெறிமுறைகள் பற்றியும் , சமுதாயக் கருத்துகளையும் , வரைவிலக்கணங்களையும் எடுத்துக் கூறுகின்றது.
இன்பம் என்ற காமத்துப்பாலில் காதலர்களின் அன்பும் அதன் வெளிப்பாடுகளும், விளுமியங்களும், காதலர்கள் காதலில் காட்டும் ஈடுபாடும், அவர்களின் மனப் போக்கும் மிகச் சிறப்பாக விபரிக்கப்பட்டிருக்கின்றன.
திருக்குறளில் 133 அதிகாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் பத்துக் குறள்கள் வீதம் 1330 வெண்பாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வெண்பாவும் இரண்டடிகள் உடையன. திருக்குறளில் ஒவ்வொரு பிரிவும் இயல் என்ற உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன.
அறத்துப் பால் பாயிர இயல் இல்லற இயல் துறவற இயல் ஆகிய மூன்று உட்பிரிவுகளுடையது.
பொருட்பால் அரசு இயல் அங்கம் இயல் ஒழிபு இயல் ஆகிய மூன்று உட்பிரிவுகளுடையது.
காமத்துப்பால் களவு இயல் கற்பு இயல் ஆகிய இரு உட்பிரிவுகளுடையது.
திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது என்றாலும் இற்றைக் காலத்திலும் கூட எந்தவொரு காலாச்சாரம் சார்ந்த அல்லது எத்தகைய நாகரீகத்தைப் பின்பற்றுகின்ற ஒவ்வொரு தனிமனுதனுடடய வாழ்வியலுக்கும் பொருந்துவதாக அமையப் பெற்றுள்ளதே அதன் மேன்மையான சிறப்பாகும்.
மனிதன் மனிதனாக வாழ்வதற்குத் தேவையான வாழ்வியலின் மேன்மை பற்றிய கருத்துக்களைக் கூறுவதன் மூலம் வாழ்கைக்கு ஒரு வழிகாட்டியாகவே பயன் தருகின்றது.
அத்துடன் தமிழ்ப் புலவரான திருவள்ளுவப் பெருமான் முழுக்க முழுக்க தமிழ் மொழியில் தான் அருளிய திருக்குறள் என்ற தமிழ் இலக்கியத்தில் இரு இடத்திலேனும் , ஒரு குறளிலேனும் தமிழ் என்றோ தமிழர் என்றோ அல்லது தமிழ் நாடென்றோ அல்லாமல் , தமிழ் நாட்டவர் என்றோ ஒரு வார்த்தை கூட எழுதவில்லை என்பதில் இருந்து அவர் இந் நூலை உலகம் முழுவதிலும் இருக்கும் எல்லாத் தரப்பு மக்களுக்காகவும் அவர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறிகளை கூறுவதே அவர் தம் நோக்கம் என்பதை திருக்குறளின் சிறப்பியல்பாகப் படைத்திருக்கின்றார் என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது எனலாம்.
இதனால் திருக்குறளை உலகின் எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த மொழி பேசும் மனிதரை திருக்குறளின் கருத்துக்களும் அற நெறிகளும் சென்றடைவதோடு அவர்களுக்கும் திருக்குறள் சொந்தமாகிவிடுகின்றது என்பது அதன் சிறப்பியல்பல்லவா?
திருக்குறளின் தொன்மையையும் , மேன்மையையும் , அதன் சிறப்பியல்புகளையும் படித்துணர்ந்த வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்ட இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் பாதிரியாரான ஜோஸப் பெஸ்கி என்பவரே இலத்தீன் மொழியில் திருக்குறளை முதன் முதலாக மொழி பெயர்த்தார். அதன் பின்னால் பலரும் உலகின் பல் வேறு மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்தனர். அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட விவிலியன் நூலுக்கு அடுத்த படியாக உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல் என்ற பெருமை திருக்குறளுக்குச் சேரும்.
இது வரை திருக்குறள் வங்காளம், இந்தி, குஜராத்தி, கன்னடம், மலையாளம்,மராத்தி, ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமஸ்கிருதம், சௌராஷ்டிரா, தெலுங்கு, உருது ஆகிய இந்திய மொழிகளிலும் , அரபு மொழி, பர்மீய மொழி, சீன மொழி,, ஜப்பானிய மொழி, மலாய் மொழி, சிங்களம், பிஜியன் ஆகிய ஆசிய மொழிகளிலும், ஆர்மேனியம், செக்கோஸ்லோவாக்கைய மொழி, டச்சு, ஆங்கிலம், பின்னிஸ் மொழி, பிரஞ்சு, , ஜெர்மன் மொழி, இலத்தீன், போலந்து மொழி, உருசியன் மொழி, ஸ்வீடிஸ் மொழி , இத்தலியன் மொழி ஆகிய ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பம்சங்களைத் தன்னகத்தே வைத்திருக்கும் திருக்குறளையும் அதன் விளக்கங்களையும் இனி மேல் தொடர்ந்து கவனிப்போம்.
நன்றி!
Monday, July 23, 2007
விழிப்பு
விடியலே!
உன்னை என்னால் பார்க்க முடிகிறது.
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டேன்,
இனிமையும் பாதுகாப்பாயுமிருந்த
ஒரு பொழுது வாழ்கை
திடீரென்று பொய்யாகி வெளுத்துப் போன
தருணங்களின் பாதிப்பில்
வீழ்ந்துவிடாமல் சுதாகரித்து கொண்டபின்
உயரமாய் எழுந்து நின்று
விடியலுக்கான சூரியக் கதிர்களை மறைக்கும்
மேகத்தின் இருளை விலக்கிப் புறக்கணிக்கும்
அசுரபலத்துடன்
நான்
சமுத்திரத்தின் நீலத்திற்க்கும் கீழான
ஆழத்தையும் அமைதியையும் கொண்ட
பலமான இதயச் சுவர்களில்
ஒளிக்கற்றைகளை உள் வாங்கிப் பழகிய பின்
விடியலே
உன்னை என்னால் நன்றாகவே பார்க்கமுடிகின்றது..
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டேன்..!
கிழித்தெறிந்து துளைத்துவரும்
சூரியக் கதிர்கள்
இடைமறிக்கும் துயர் முகில்களை சாம்பலாக்கி
இன்னும் சற்று நேரத்தில் வெளிப்படும் போது
என் கண்களிலிருந்து கண்ணீர்க் கறைகள்
காய்ந்து போகும்.
என் இதயத்தினுள் பார்க்கின்றேன்..
என்னவொரு வெளிச்சம்?
ஏய்..!
என்னை வீழ்த்திவிட்டதாய் இறுமாந்தவனே!!
பார்..
நான் சாமர்த்திய சாலி...
இதயத்தினடியில் துயரங்களை புதைத்த
அஸ்திவாரத்தில் நிமிரும் கட்டிடங்களாக
சில இலட்சியங்களுடன்
இன்னொருமுறை வாழ்ந்து பார்க்க வேண்டிய
வாழ்கைக்கான ஒளி வாங்கிய
விழிப்புடன் விழித்துக் கொண்டேன்..
வாழ்கைச் சூதாட்டத்தின்
சீட்டுக்களை விளையாடக் கற்றுக் கொண்டபின்னால்
என் நேரங்களின் அருமையையும்
எனக்குள் விளைந்த அழகின் அருகதையையும்
உணராத..
என்னோடிருந்த பயங்களை உதறிய தருணங்களில்
விடியலே...
உன்னை என்னால் பார்க்கமுடிகின்றது,
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டுவிட்டேன்..!!
Sunday, June 17, 2007
தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்!
நொறுக்குத்தீனியா..நோ..நோ..!
...அன்புடன் ....விசாலம் ,
ஒரு காதலின் கதை
"ஏண்டி லேட்டு ! நீ எப்ப வருவியோன்னு நான் மடில நெருப்பை கட்டிகிட்டு
தவிச்சிட்டு இருக்கேன்"
"மா. வயசாக ஆக உனக்கு புத்தி கெட்டுப்போச்சி...நெருப்பை யாராவது மடில
வச்சுப்பாங்களா. எதெதெ எங்க வெக்கணுமோ அங்க வெக்கணும்"
"நக்கல் பண்றியாடி...தப்புத்தான். உன்னை எங்க வெக்கணுமோ அங்க
வச்சிருக்கணும். ஏண்டி லேட்டு"
"மா இன்னிக்கு ஸ்பெஷல் கிளாஸ்"
"ஆஹா! எவ்வளவு சினிமால பாத்திருக்கேன். ஹீரோயின் லேட்டா வருவா....அப்பா
உக்காந்து பேப்பர் படிச்சிட்டு இருப்பார். இவ லலலான்னு ஹம்
பண்ணிட்டே மாடிப்படி ஏறிப்போவா..'நில்லு ஏன் லேட்டு.....டாடி ஸ்பெஷல்
கிளாஸ்...ஒஹோ...நீ படிச்சது போதும்"
"அம்மா. நீ நெறய டீவீ பாத்து கெட்டுப்போயிட்டே....மொதல்ல டீவீய
வித்துட்டு ஒரு கம்ப்யூட்டர் வாங்கிப்போடணும்"
"ஆமா அப்பத்தானே நீ கண்டவனுக்கும் ஈ மெயில் அனுப்பலாம்...போறாததுக்கு
இன்டர்நெட் வேற....கடலுக்கு பிஷ்ஷிங் நெட்டு..காதலுக்கு
இன்டர்நெட்டுன்னு ஒரு படத்தில பாடறானே"
"அம்மா. எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு"
"அய்யோ அந்த அளவுக்கு முத்திப்போச்சா..அப்ப செல்போன்ல sms....கவிதைன்னு
வேற ஆரம்பிச்சிட்டியா..."
"அம்மா எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடறே மா...கவிதை படிக்கறது ஒரு
இலக்கிய ஆர்வம்"
"உங்க இலக்கிய ரசனை எனக்கு தெரியாதாக்கும்...அந்த மாம்பழம் பாட்டை டீவில,
ரேடியோல விழுந்து விழுந்து கேக்கறியே அதுல என்னடி பாடறான்
ஒதட்டோரம் இனிப்பியோ
கழுத்தோரம் புளிப்பியோ
இடுப்போரம் துவப்பியோ சொல்லிப்புடுடீ
பதிலுக்கு அவளும் பாடறா..
என்னோட மடிப்புல
அறுசுவையும் இருக்குடா
எங்க என்ன ருசி இருக்கோ
டேஸ்ட் பண்ணி சொல்லுடா
"என்னம்மா நீ நான் சும்மா அந்த ம்யூசிக் பிடிச்சிதான் மா கேட்பேன்..இந்த
அர்த்தமெல்லாம் கவனிச்சதே இல்லம்மா..அய்யோ என்னை விட்டுரும்மா"
"விட்டுட்டா ஓடிடலாம்னு பாக்கறியா. எங்க அண்ணன் அதான் உங்க மாமா
மத்தியானம் வந்திருந்தார். அவர் பையனும் இப்படித்தான்
திரிஞ்சிட்டுருக்கானாம். அப்பத்தான் முடிவு பண்ணினோம். ஒரே கல்லுல ரெண்டு
மாங்கா...ரெண்டு வீட்டு பிரச்னைக்கும் ஒரே தீர்வு.. உனக்கும் ராமு
அத்தானுக்கும் கல்யாணம். நாளைக்கு காலைல நிச்சயதார்த்தம். இன்னிக்கு
ராத்திரியே எவன் கூடயாவது ஓடிடலாம்னு நினைக்காதே. உன், ட்ரெஸ்,
நகை எல்லாம் பீரோல வெச்சு பூட்டி சாவிய ஒளிச்சு வெச்சுட்டேன். இந்தா.
இந்த நைட்டிய மட்டும் போட்டுக்கோ...எனக்கு தெரிஞ்சு எந்த சினிமாலயும்
' நைட்டியோட ஓடற மாதிரி இது வரை காமிக்கல...புதுசா ஏதாவது வரலாறு
படைச்சிடாத"
ரம்யா மெல்ல தன் அறைக்குள் நுழைந்து மெதுவாக செல்பேசி எடுத்து மூன்றே
வார்த்தைகளில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
" சக்ஸஸ்..ராமு அத்தான்"
--ராஜன்(சுந்தர்)
கென் கவிதைகள்
தன்னிருப்பை நியாயப்படுத்துகின்றன.
நிராகரிப்பின் கூர்மையால் கிழித்து
இரத்தம் புசிக்கின்றன.
ஒற்றை சிறகின் பிரிதலறியா பறவையாய்.,
மனம் வேறாய் உடல் வேறாய்...
சூழ்நிலைப் பாறைகளின் மேல்
மோதி விழுகிறது.
எவரேனும் சொல்லித்தாருங்களேன்,
சாபங்களிலிருந்து உயிர்த்தெழுதலை..
கென் கவிதைகள்
வெடித்திட்ட எரிமலையாய் கோபம்,
அனல்குழம்பாய் வார்த்தைகளை மூழ்கடிக்கிறது!
தனிமைப்பாதையில் வெறி கொண்டோடி,
நட்பை பொசுக்கி பசிதீர்க்கிறது.
ஆறிப்போன பின்னே மெல்ல
அமைதி சாம்பல் துடைத்துயர்கிறது.
இப்போது எரிமலை உறங்குகிறதாம்,
எனைப்போல் மெளனத்தில் ஒளிந்தபடி...
கென் கவிதைகள்
கோயில் நுழையும் புறாக்களின்
சிறகசைப்பாய்,
மனதுக்குள் குதியாட்டமிடுகிறாய்.
காத்திருந்த பகல்களின்
கானல் நீரில்,
இரவுகள் ஒளியிழக்க
முலாமிழந்த கண்ணாடியாய் என்
மனம் தொலைந்திடுகிறது.
கூட்டில் பசிதுடிக்கும் சிறுபறவையாய்,
தத்தித்துடிக்கிறது என் காதல்...
வல்லூறுக்களின் பிடியில் சிக்கிக்கொண்ட
தாய்ப்பறவையின் நிலையறியாமல்..
யோக வாழ்க்கை - 5 - இரா. ஆனந்தன்
மனவளக்கலையை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்படுகிறது. விஞ்ஞானம் வளர்ச்சி
பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் எண்ணிக்கை அச்சம் தரும் அளவுக்கு
உல்கில் பெருகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைப் பொருட்களின் எண்ணிக்கை
மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போகிறது. அரசியல் பொருளாதாரத் துறைகளில்
குழப்பமும் சிக்கலும் மிகுந்து வருகின்றன. தனிமனிதன் வாழ்வில் அச்சமே
சூழ்ந்திருக்கிறது. இந்த நிலையில் சிந்தனை ஆற்றல் உடையவர்கள், சமுதாய நல
நோக்கம் உள்ள தலைவர்கள், ஆன்மீக வழி நின்று வாழெது வரும் நல்லோர்கள்,
மனித வாழ்க்கை நிலையை நினைத்தும், எதிர்கால உறுதியின்மையை நினைத்தும்
வருந்தியும், சிந்தித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
இந்த உலகக் குழப்ப நிலையில் ஆன்மீக விளக்கமும் அதையொட்டிய வாழ்க்கை
நெறியும்தான் தனிமனிதனை, மனித குலத்தைக் காக வல்லது. உயிரின்
மதிப்புணர்ந்து, மனத்தின் மேன்மையுணர்ந்து மற்றவர்களுக்கு மதிப்பளித்துத்
தன் செயலை அளவுமுறைக்கு உட்படுத்தி வாழத்தக்க பயிற்சியும், பழக்கமும்
ஆன்மீக அறிவு விளக்கத்தால்தான் கிட்ட முடியும். ஆன்மீகம் எனும்போது
குறுகிய நிலையில் தனிப்பட்ட மதம் என்றோ, உருவ வழிபாடு என்றோ கருத
வேண்டாம். அதற்கெல்லாம் அப்பாற்பட்டது. மற்ற உயிர்களையும் மதித்து
நடக்கும் எண்ணத்தை தன் மனத்தில் வைத்து நடைமுறைப் படுத்தி வாழும்
மாமனிதனாக வாழும் நிலை பற்றியது.
ஆறறிவு பெற்றும் மனிதன் உடல் வரையில் எல்லைகட்டி இருப்பதனாலே புலன்
உணர்ச்சிகளுக்குட்பட்டு வாழ்க்கியைல் தனக்கும், பிறருக்கும் துன்பத்தைத்
தேடிக்கொள்கிறான். உயிரின் மதிப்பை உணரும், அறிவின் பெருமையுணரும் ஆன்மீக
வாழ்வு ஒன்றே மனிதனை நல்ல மனிதனாக, ஒழுக்கமும், கடமையும், ஈகையும்
உணர்ழ்து வாழ்பவனாகச் செய்யும். ஆறாவது அறிவின் பயன் மனம், உயிர்,
மெய்(Truth) என்னும் மூன்று மறைபொருட்களை உணர்வதற்கேயாம்.ஆரோக்கியமான
உடல், அமைதியான மனம் இவை இரண்டின் துணைகொண்டு சாதகன் உயிரின் தன்மையை
அறிந்து கொள்ள முற்படும்போது, எல்லாம் வல்ல, எல்லாவற்றையும் தன்னகத்தே
கொண்டுள்ள இயற்கையானது தனது ரகசியங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அவனுக்கு
விளக்கத் துவங்குகிறது. பிறந்து வந்ததன் நோக்கம் தெளிவாகி, வாழ்க்கயின்
குறிக்கோள் விளங்கிவிட்டதாலே விழிப்புநிலை அடைந்த சாதகன் பிறவியின்
பெருநோக்கம் மறவாது தன் செயல்கள் அனைத்தையுமொழுங்கு செய்துகொள்ளப்
பயிற்சி பெற்றுவிடுகிறான். "நான் யார்?" என்ற மேதகு கேள்விக்கு விடை
கண்டு, அந்த விடையின் வெளிச்சத்திலே மனத்தூய்மை, வினைத்தூய்மை பெற்றுப்
பிறருக்கு வழிகாட்டும் அளவுக்குத் தன்னை உயர்த்திக் கொள்கிறான். இந்தப்
பயிற்சியை ஏற்பதற்கான தகுதி உலகத்தில் பிறந்துள்ள அனைத்து மக்களுக்கும்
உள்ளது என்ற உண்மையை அறிவிப்பதே மனவளக்கலை என்று வேதாத்திரி மகரிஷி
தெரிவித்துள்ளார். இதிலே மிகச் சுலபமான உடற் பயிற்சிகள், தியானம்,
காயகல்பப் பயிற்சி, அகத்தாய்வுப் பயிற்சிகள் அடங்கும். இதன் நான்கு செயல்
முறைகளாக அகத்தவம் (Meditation), அகத்தாய்வு (Introspection),
குணநலப்பேறு (Sublimation), முழுமைப்பேறு (Perfection). இதன் மூன்று
வளர்நிலைகளாக மனவிரிவு பெறுதல் (Expansion of the mind), இயற்கை விதி
அறிதல் (Understanding the Law of Nature), எண்ணம், சொல், செயலில்
விழிப்புடன் இருத்தல் (Maintaining awareness in thought, word and
deed). இப்பயிற்சிகளின் வெற்றியாக நுண்மான் நுழை புலன் (Perspicacity),
ஏற்புத் திறன் (Receptivity), தக அமைதல் (Adaptability), பெருந்தன்மை
(Magnanimity), ஆக்கத்திறன் (Creativity), இசைவு (Harmony), நிறைவு
(Satisfaction ), மகிழ்வு (Happiness), மெய்யறிவு (Wisdom), அமைதி
(Peace) உண்டாகிறது.(வளரும்)
யோக வாழ்க்கை -3&4 - இரா. ஆனந்தன்
சாதனையாளர் பல நிலைகளில் மன அலைச் சுழலைத் தவத்தினால் பழக்கி வைத்துக் கொள்கிறார். இவர் ஆல்பா அலை (விநாடிக்கு 8 - 14 சுழல்) தீட்டா அலை (விநாடிக்கு 4 - 7 சுழல்), டெல்டா அலை (விநாடிக்கு 1 - 3 சுழல்) என்று பல நுண்ணிய அலைகளில் அகத்தவம் பழகுகிறார். இதனால், இவரது மனம் மிகவும் நுண்ணிய சுழல் விரைவு நிலையில் பெரும்பாலும் இயங்கிக் கொண்டிருக்கும்.
எனவே இந்த மன அலைச் சுழல் நிலைக்கு மேலான விரைவு அலைச்சுழல் இயங்கும் நிலையில் அல்லது அதே சுழல்விரைவு நிலையில், யார் ஒருவர் ஆழ்ந்தசிந்தனையின் மூலம் ஒரு விஞ்ஞான உண்மையையோ, தத்துவ உண்மையையோ, மேலும் இயற்கை ரகசியங்களையோ உணர்ந்து கொண்டால், அது இவர் மனத்தில் தானாகப் பிரத்பலிக்க அதனை உள்ளுணர்வாகப் பெறுகிறார்.
எதையாவது உணரவேண்டும் என்றூ சொன்னால் அதைவிட நுண்ணிய நிலையில் இருந்தால்தான் உணர முடியும். அதற்கு ஆங்கிலத்தில் சரியான அர்த்தத்துடன் 'Understand' என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. 'Understand' என்றால் 'You stand under ' என்பதாகும்."புரிந்து கொள்" என்பதற்கு "அடியில் நில்" என்று பொருள். எந்த ஓர் இயக்கம் நடந்தாலும், அதைவிட நுண்ணிய நிலைக்கு வந்தால்தான் அதை உணர முடியும் மன அலையை விநாடிக்கு 1 - 3 சுழல் விரைவு என்ற டெல்டா அலைக்குக் கொண்டு வருகின்றபோது எல்லாவற்றையும் உணர முடிகிறது. மேட்டிலே இருக்கும் நீர் பள்ளம் போய்ச் சேர்வதுபோல், மனம் அகண்டாகாரத்தில் (சுத்தவெளியில்) இருக்கும்போது இயற்கை ரகசியங்கள் உள்ளுணர்வாய் மலரும்.
*************************************************************************************
4. வாழ்க வளமுடன்: வேதாத்திரிய மன வளக்கலை ::.. வேதாத்திரி மகரிஷி
உணர்ந்து ஓதுபவர். அவர் உலக நலனில் அக்கறை கொண்டு எண்ணிய
சிந்தனைகளுகெல்லாம் தன் உள்ளிருந்து வந்த விடைகள் அனைத்தையும்
வெளியிட்டுள்ளார். இதுவரை வந்த பல சிந்தனையாளர்களின் கருத்துக்களை
எல்லாம் உள்ளடக்கி, அவற்றுடன் தனது அனுபவத்தையும் சேர்த்து ஒரு முறையான
அடித்தளமாக அமைத்துள்ளார். அக்கருத்துக்களின் தொகுப்பே வேதாத்திரிய
வாழ்க்கை நெறியாகும். இதில் இறையுணர்வு, அறநெறி வற்புறுத்தப்படுகின்றன.
இறைநிலை என்பது சுத்தவெளி. அந்தச் சுத்தவெளியை உணர்வதே இறையுணர்வு.
அறநெறி என்பது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் இணந்த வாழ்க்கை நெறி.;
தனி மனித மேம்பாட்டுக்கு ஐந்தொழுக்கப் பண்பாடும், உடல் நலம் பெற எளியமுறை உடற்பயிற்சிகளும், உயிர் நலம் பெற காயகல்பப் பயிற்சியும், மனத்தை ஒழுங்குபடுத்தத் தவமும், தன்னைத் திருத்திக்கொள்ள அகத்தாய்வுப் பயிற்சியும், நான் யார் என அறிந்து, இறைநிலையை உணர்ந்து, ஞானத்தை வளர்த்துக் கொள்ளத் தத்துவ விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன. தான் வாழுகின்ற உலகத்தில் மற்ற உயிர்களுடன் ஒத்து வாழ்வதற்குப் பதினான்கு வேதாத்திரிய நன்னெறிகள் கற்றுத் தரப்படுகினறன. கல்வியில் ஒழுக்கத்தின் அவசியமும், அதனை வள்ளுவம் சொல்லுவதுபோல் நடைமுறைக்குக் கொண்டுவரவும், அதுவே பழக்கமாக மாறவும், "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்கின்ற அவ்வையின் கூற்றுக்கு இணங்க, அரிதான மானிடப் பிறவியை
மேம்படுத்தவும், முழுமை பெறவும்,, இயற்கைத் தத்துவ அறிவையும், ஒழுக்கப் பழக்கங்களையும் வழங்க இக்கலை உருவாக்கப் பட்டுள்ளது. இது போதனை மார்க்கம் மட்டுமல்ல சாதனை மார்க்கமுமாகும்.
வேதாத்திரி மகரிஷி சென்னைக்கு அருகிலுள்ள கூடுவாஞ்சேரி கிராமத்தில்
1911ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் நாள் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார்.
இறைநிலை தெளிந்த மாமனிதர். தனிமனித அமைதி மூலம் குடும்பம், சுற்றத்தார், ஊரார், உலகோர் அமைதியோடு வாழ வழிகாட்டுகின்ற பெருந்தகை. மக்களனைவரும் இறையுணர்வு பெற்று, அன்பும் அறநெறியு, ஓங்கி வாழ வகை செய்துள்ளார். பாமர மக்களும் எளிமையாகக் கற்று வழ்க்கியில் பின்பற்றும் வகையில் பயிற்சிகளை வடிவமைத்துள்ளார். தத்துவத்தில் அத்வைதத்தையும், யோகத்தில் ராஜயோகத்தையும் இணைத்து பாமர மக்களும் உணர்ந்து கொள்ளூம் வகையில் அவர்
கற்பிக்கும் அகத்தாய்வுப் பயிற்சிக:ள் அமைந்திருப்பதால், அவர் "பாமர
மக்களின் தத்துவ ஞானி"(Common Man's Philosopher) என்று
அழைக்கப்படுகிறார். மெய்ஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் ஒருங்கிணைத்து விளக்குகிறார். மகரிஷி வெளியிட்டுள்ள எந்த ஒரு கருத்தும் பகுத்தறிவிற்கோ, விஞ்ஞானத்திற்கோ புறம்பானதன்று. தமிழில் நேரடியாகத் தோன்றாத குறையைப்போக்கி, தான் அகக் காட்சியாக உணர்ந்த கருத்துக்களைக் கவிதைகளாகவும், உரைநடை நூல்களாகவும் எளிய தமிழில் அலித்துள்ளார். மகரிஷியின் 92- வது பிறந்த நாளையொட்டி ஆழியாறு அறிவுத் திருக்கோவிலில் நடைபெற்ற உலக அமைதி மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நேரில் கலந்து கொண்டு, அருள்தந்தையின் உலக சமாதானத் திட்டத்தைப் பெற்றுச்
சென்றது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.(வளரும்)
************************************************************************************
மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்!
விடாமல் இருக்க
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை
உருவாக்கிக் கொள்ளுங்கள்.
***************
உங்களது அன்றாட
நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன்
வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.
***************
எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச்
செய்து கொண்டிருங்கள்.அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச்
செய்யும்.
***************
ஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையே
வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.
***************
நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.
***************
நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.
***************
நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள்.
***************
மன இறுக்கத்தையும் சோர்வினையும் மாற்றிக்கொள்ளுங்கள்.
***************
மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.
***************
அன்புடன்...பாலமுரளி.
2.
உள்ளத்தை பக்கவப்படுத்திக்கொண்டு
பொறாமைகளை அறவே.ஒழித்தெறிந்து
இருப்பதையும் கிடைத்ததையும் வைத்து
ஆசைகளை கைவிட்டு வாழ்ந்து கொண்டே போனால்
இளமையுடன் அமைதியுடன் சந்தோசமாய் வாழமுடியும்
அன்போடு
குயில்
நகைச்சுவை(ங்க..)!
சுட்டது மாதிரிதான் ஆனாலும் எஃப்.எம்.ரேடியோவில் கேட்ட ஒரு விஷயத்தின் உருமாற்றம்...
ஒரு பையன் அப்பகிட்ட வந்து மார்ஷீட்டைக் காட்டினான்.
அதைப் பார்த்த அப்பா"என்னடா இது வெறும் 10 மார்க்தான் வாங்கியிருக்கே"ன்னு கோபமா கேட்டாருங்க..
அதுக்கு அந்தப் பையன்
"இந்த மாதிரியெல்லாம் மாத்தி மாத்தி பேசாதீங்கப்பா..
போனவாட்டி 25 மார்க் எடுத்தப்போ என்ன சொன்னீங்க?"
"என்ன சொன்னேன்? ம் இன்னும் 10 மார்க் எடுத்திருந்தா பாஸ் ஆகியிருக்கலாம்னு சொன்னேன். அதுக்க்கென்ன இப்போ?"
"அப்படி சொல்லிட்டு இப்ப மாத்தி பேசலாமா அப்ப எடுக்க வேண்டிய 10 மார்க்கைதான் இப்போ எடுத்திருக்கேன்.அதுக்கு பாராட்டாம திட்டறீங்களே இது நியாயமா"ன்னு கேட்டான்
ஆடிப்போயிட்டாரு அப்பா பையனின் புத்திசாலித்தனத்தில்..
(இதுவும் புதுசுங்கோ:பறக்கும் விமானத்தின்மேல் உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்)
அன்புடன்....பாலமுரளி
லட்சத்தில்.. ஒருவள் -விசாலம்
புதிய கலித்தொகை - பாகம் 1 -ஸ்வாதி
அன்புடையீர்!
சரித்திரம் என்பது சந்ததிகளுக்காக சேர்க்கப்படுகின்ற உண்மைச் சங்கதிகளின் தொகுப்பு. கவிதை என்பது உவமைகளும் பொய்களும் கலந்த வார்த்தைச் சந்தங்களின் கோப்பு. ஆனால் நான் ஒரு சரித்திரத்தின் விசுவரூபத்தையும் அதன் விளக்கத்தையும் பொய் கலக்காமல் கவிதையில் தர முயன்றிருக்கிறேன். என்னுடைய முயற்சியின் பலனை அறிய உங்கள் முன் தமிழன்னையின் காலடிகளில் இவ்வாக்கத்தைச் சமர்பிக்கின்றேன்.
கபிலரும், மருதனிளநாகனாரும்,சோழன் நல்லுருத்திரனும், நல்லந்துவனாரும் பாடிய அரும் பெரும் கலித்தொகைக்கும் இந்த புதிய கலித்தொகைக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை கலி என்ற வார்த்தைப் பதம் போர், சிறுமை, வஞ்சகம், கஷ்டம் , நீசம், நாசம், துன்பம் போன்ற அர்த்தங்களிலிருந்து போர், துன்பம்,சிறுமை ஆகிய அர்த்தத்தினடிப்படையில் தலைப்பாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சொற்கோர்வைகள். என்னுடைய மனதின் உணர்வு வெளிப்பாடுகளை கொஞ்சம் இலக்கிய மெருகுக்குட்டி அழகு கொடுத்துள்ளேன். அவ்வளவு த
ான்!!!! நோக்கம்
எந்த ஒரு படைப்பாளியும் தன்னுடைய ஒவ்வொரு ஆக்கத்திற்கும் ஏதோ ஒரு காரணம் அல்லது ஒரு நோக்கம் வைத்திருப்பர். அங்ஙனமே என்னுடைய இந்த ஆக்கத்திற்கான நோக்கத்தினை நான் முதலில் விவரித்துவிட்டு மேலே தொடரலாம் என்று நினைக்கின்றேன்.
அங்கே ஓரினம் கொள்கைகளால் வேறுபட்டாலும் , தமிழீழம் என்ற ஒரே ஒரு குறிக்கோளுக்காய் தவமிருப்பது உலகமெலாமுணரப் பட்ட வெள்ளிடை மலை வெளிச்சம். தமிழ் அல்லது தமிழன் என்றால் உடனே உலகத் தமிழர்களிடம் மட்டுமல்ல உலக நடப்பறிந்த அனைவரது நினைவிலுமே முதலில் வருவது கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடப்பிலிருக்கும் தமிழீழப் போராட்டம் என்றால் மிகையாகாது.
தமிழன் போகாத நாடு, வாழாத நாடு உலகப் படத்திலேயே இல்லை; ஆனால் தமிழனுக்கென்று சொந்தமாய் ஒரு தனி நாடு உலகத்தில் இல்லை; ஜன நாயக அடிப்படையில் கிடைக்க வேண்டிய முறையான உரிமைகள் மறுதலிக்கப்பட்டவர்களுக்கும், பெரும் பான்மையினத்தின் மேலாதிக்கமும், எதேச்சாதிகாரமும், இன துவேஷ வெறியும் கொடுமையான முறையில் பிரயோக்கிக்கப்பட்டதில் மிகக் க
தமக்கென்று ஒரு தனி நாடு தமிழீழமாக மலர வேண்டும் என்ற உறுதியான விருப்பங்கள் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தமிழீழத்தை நானும் ஆதரிக்கின்றேன். தமிழீழத்தின் புதிய விடியலின் முதல் சூரியனைப் பார்க்கும் வரையாவது இருக்க வேண்டுமென்ற பிர்ராத்தனைகள் எனக்குள்ளும் இருக்கின்றன.ஆனால் எல்லோரையும் போல் கரிசலில் கனரகம் ஏந்துமளவுக்கு தைரியம் இல்லாத கோழை நான். என்னிடம் இருக்கும் ஒரேயொரு ஆயுதம் என்னுடைய எழுத்து மட்டும் தான்.
இந்த எழுத்து தமிழீழத்தின் எதிரிகளைச் சாடும்; தமிழீழத்துக்காக மரணிப்பவர்களை பூஜிக்கும்; தமிழீழப் போராட்டத்தில் பல் வேறு வகையில் சிதைந்து போன ஆத்மாக்களை வணங்கும். ஆக இது ஒரு தனி நபர் துதியோ அல்லது வசை மாரியோ அல்ல.
ஒரு வகையில் இது அங்கே ஈழத்தில் ஆயுதமேந்திய போரில் மரணங்களை முத்தமிட்ட மாவீரர்களுக்கு மரியாதை செய்யும் என்னுடைய சமர்ப்பணம்; தமிழீழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலிருந்து தமிழீழத்திற்காக உயிர் நீத்த அத்தனை ஆத்மாக்களுக்கும் அவர்களுடைய கல்லறைகளில் அஞ்சலிக்காக வைக்கப்படும் ஆயிரக் கணக்கான மலர்களில் ஒன்று ..அவர்களுக்கான என்னுடைய வணக்கத்தின் சிறு வடிவம் மட்டுமே!
இவ்வாக்கத்தை ஒரு ஈழத் தமிழன் குயில் ஒன்றிடம் தமிழீழம் பற்றி சிலாகிப்பதாக அமைத்திருக்கின்றேன்.
என்னைப் பொறுத்தவரை பகுத்தறிவில்லாத அஃறிணையும், சரியான முறையில் தனது பகுத்தறிவைப் ப்யன்படுத்தாத உயர்திணை மானுடமும் சமமானவை. அதனால் தான் இந்தப் போராட்டம் பற்றிய விழிப்புணர்வை பகுத்தறிவில்லாத ஒரு பறவையிடம் விளக்குவதாய் இவ்வாக்கத்தை உருவமைத்திருக்கின்றேன்.
பகுத்தறிவில்லாத அஃறிணையில் குயிலை விசேசமாக நான் தேர்வு செய்தற்கு சில காரணங்கள் உண்டு.
முதல் காரணம், அநேகமான எல்லா ஜீவ ராசிகளும் தமக்கென்று உறைவிடம் தேடுவதிலும், அடை காப்பதிலும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்கின்றன. ஆனால் குயில் அப்படியல்ல. தன்னுடைய பொறுப்புகளின் கனம் உணராது தன்னிச்சைப்படி தான்தோன்றித் தனமாய் காகக் கூடுகளில் முட்டையிடுகிறது; அடை காக்காமல் தனது தாய்மை பேணத் தவறியது.
ஆனால் குயில் முட்டைகளைத் தன் முட்டைகளாக நினைத்து அடைகாக்குகம் காகமானது குயில் குஞ்சு வளர்ந்து தன்னுடைய சந்ததியினரைப் போல் கரையத் தெரியாமல் வேற்று மொழியில் குயில் கூவும் போது தான் தன் குஞ்சுக்கும் குயில் குஞ்சுக்குமிடையில் அன்னியம் அறிந்து கொத்தி விரட்டும். இந்தத் தாக்குதலில் எத்தனை குயில் குஞ்சுகள் தப்புமோ எத்தனை குஞ்சுகள் செத்து மடியுமோ?
பொறுப்பில்லாத தாய்மையினால் ஏற்பட்டது தன் இந்த நிலமை. தனக்கென்றூ ஒரு சிறு கூடு கட்டத் தெரிந்தால் குயிலினம் இத்தகைய பரிதாப நிலைக்குகளுக்கு ஆளாகியிருக்காது.
இந்தக் குயிலைப் போல் பொறுப்பில்லாத மனிதர்கள் எங்கள் மானிட சமூகத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதாரணமாய் இங்கு குயிலைக் குறிப்பிட்டுள்ளேன்.
இரண்டாவது காரணம் , பாரதியார் முதற் கொண்டு இன்றைய சினிமாக் கவிஞர்கள் வரை குயிலைக் காதல் கவிதைகளில் மட்டுமே சம்மந்தப்படுதியிருக்கிறார்கள்.
அதே போல் இங்கே ஒரு மாற்றத்திற்காக புரட்சியிலும் அந்தக் குயிலை சம்மந்தப்படுத்துவோமேயென்ற எண்ணத்தில் குயிலுக்கு இன்னொரு அந்தர்ப்பம் கொடுத்துள்ளேன்.
என்னுடைய இவ்வாக்கம் யாருடைய மனதையும் நோகடிக்கப்பட வேண்டுமென்ற எண்ணத்திலோ நோக்கத்திலோ எழுதப்பட்டதல்ல. என்னுடைய தேசத்தையும் , எங்களின மக்களையும் , அவர்களது இன்னல்களையும் பார்த்து மனம் நொந்த நிலையில் எழுதப்பட்டது.
என் கரிசலுக்கான போராட்டத்தையும் அதைக் கொண்டு நடத்தும் போராளிகளையும் பற்றி விமர்சிக்கவோ அல்லது குறை நிறை சொல்லவோ போரரட்டச் சூழலுக்கு அப்பால் புலம்பெயர்ந்திரு ப்போருக்கும் சரி, எம்மெல்லைகளுக்கப்பால் எட்டி நின்று வேடிக்கை பார்ப்போருக்கும் சரி உரிமையில்லை என்பது என்னுடைய அபிப்பிராயம்.
அவர்கள் அங்கே போராடுவது எதற்காக? யாருக்காக? அங்கே அவர்கள் தமது வாழ்கையை அல்லவா எம் ஒவ்வொருவருக்காகவும் பணயம் வைத்திருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன தலையெழுத்து எமக்காக உயிரை மாய்த்துக் கொள்ள?ஒரு மனிதனந்தான் வாழ விரும்பி, அதற்காக அத்தனை குறுக்கு வழிகளையும் கையாளும் இந்தக் காலத்தில், அங்கே அந்த வினாடியிலும் மரணத்தை எதிர் நோக்கிய சூழலில் தம்மை அர்ப்பணிக்க அவர்கள் என்ன முட்டாள்களா?எத்தனை பேர் நம்மில் எமக்கான சுதந்திரத்தைப் பற்றியும் இப்போராட்டத்தைப் பற்றியும் சரியாகப் புரிந்திருக்கிறார்கள்? எத்தனை பேருக்கு சுதந்திரத்திற்கான விழிப்புணர்வு இருக்கிறது? எத்தனை பேர் தினசரி செய்திகளாக அல்லாமல் தமது ஆயுளாகவும் , வாழ்கையாகவும் போரளிகளின் தியாகங்களையும் , தீர்க்கங்களையும் உணார்ந்திருக்கிறார்கள்?
இந்தக் கேள்விகள் தான் என்னை இந்த புதிய கலித்தொகையை எழுத வைத்தது.
சுதந்திரம் என்பதும் அதற்கான தீர்வு எடுப்பதும் எல்லோருக்கும் பொதுவான உரிமை. உலகத்தின் சகல சரித்திரங்களிலும் போராட்டத்தின் பின்பே சுதந்திரம் என்பது கிடைத்திருக்கிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திடம
ஈழத்துக் காந்தி எனப் போற்றப்ப்பட்ட தந்தை செல்வா போன்றோர் எங்களூரிலும் அஹிம்சை வழியில் போராடினார்கள். ஆனால் சிங்கள அரசு கண்டு கொள்ளவில்லை. உலகமே பார்த்துக் கொண்டிருக்க அஹிம்சை வழியில் ஒரு துளி நீராகாரம் கூட வாயில்
ஆக என்னுடைய இவ்வாக்கம் தமீழீழப் போராட்டத்தை மரியாதை செலுத்தும் முகமாக தொகுக்கப்பட்டது. இதற்கான விமர்சனங்களையும், கருத்துக்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்த்திருக்கிறேன்
நன்றி!
சுமை - குயில்
----
எரித்திடும் வார்த்தைகளை
சுமப்பதை விட..
என் உடலை
எரித்துவிட்டால்..
இந்தப்பூமிக்கும்..
சுமையில்லாத
சுகமாகிவிடும்.
-----
rahini
தொ(ல்)லை தூரக்கல்வியும் தொடர்ச்சியான வெய்யிலும் -ஷாரா
எனக்குத் தெரிந்த வரையிலே, அனைத்துத் தொலைதூரக்கல்வி வழங்கும்
பழ்கலைக்கழகங்கள் எல்லாமுமே இந்தக் கொடுமையை ஆற்றி வருகின்றன.
இந்த பல்கழைக்கழகங்களில் யார் படிப்பார்கள்?
"இறுவயதில் படிக்க இயலாத சூழ்நிலைகளால் - பாதியில் படிப்பை
விட்டுவிட்டவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு." - இது பாஸிட்டிவ் அப்ரோச்.
இங்கே படிப்பவர்கள் - சிறு வயது / கைக்குழந்தைகளைக் கொண்ட இளம்
தாய்மார்கள் நிறையப்பேர். இது மறுக்க இயலாத உண்மை. அனைவரும் அறிவர்.
இந்த 'அக்னிநட்சத்திர' - சுட்டெரிக்கும் சூரியனின் கொடுமைக் கால
நேரத்தில்தான் - எல்லா நிலையங்களுமே 'பரீட்சைகளை' நடத்துகிறார்கள். இந்த
'அக்னி' நட்சத்திர நேரத்தில் படிப்பதே கடினம். தனது ஊருவிட்டு வேறு
ஊருக்குச் சென்று பல மைல்களுக்கு அப்பால் - 'பரீட்சை' எழுதச்செல்லும்
இளம் தாய்மார்களின் நிலைமை பரிதாபம்.
தனது கைக்குழந்தையை சமாளிப்பதே பிரம்மப்பிரயத்தனம். அதைச் சமாளித்து
படித்து, பல மைல்கள் பிரயாணித்து பல்கலைக்கழகம் சென்று பரீட்சைகள் பல
எழுதிப் பட்டம் வாங்கி பணிக்குச் செல்லவேண்டும்.
எல்லாமே ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.. ஒரே ஒரு விசயத்தைத்தவிர. அதாவாது 6
பரீட்சைகளையும் திங்கள் முதல் சனி வரை தொடர்ந்து போட்டுத்தாக்கி
விடுகிறார்கள். அவர்கள் படும்பாடு பெரும் கவலையை ஏற்படுத்துகிறது..
பெண்களுக்கு 'மனவலிமை' அதிகம்தான். ஆனாலும் அவர்களின் மன அழுத்தம் -
தொடர்ச்சியான 6 பரீட்சைகளால் அதிகரிக்கிறது. மன அழுத்தம் ரொம்பவுமே
மோசமானது. அதைப்பற்றி இந்த பழ்கலை நிர்வாகங்களுக்குச் சிறிதளவாவது
அக்கறை
வேண்டும்.
நான் கேட்டுக்கொள்வது இரண்டே இரண்டு கோரிக்கைகள்தான்
ஐயா புண்ணியவான்களே
1) பரீட்சையை அக்னி நட்சத்திர நேரத்தில் படுத்தும் வெயிலில்
வைக்காதீர்கள்".
2) எல்லாப் பரீட்சைகளையும் தொடர்ந்து ஒரே சீரியசாக ' திங்கள் முதல் சனி'
வரை வைக்காதீர்கள்.
குயிலின் தத்துவவரிகள்.
வேண்டாம்.
--------
கொண்று விடும்.
மானிடம் வேண்டாம்.
பொசுக்கும் வார்த்தை
வேண்டாம்.
கல்லான மனசும்
வேண்டாம்.
பொல்லாத பெயரும்
வேண்டாம்.
பொய்யான காதலும்.
வேண்டாம்.
பலருக்கு மதிப்பளித்து
பதவியும் தேட
வேண்டாம்.
பணமே..வாழ்வாகி
விட்டபோது
அன்பைதேடி செல்லவும்
வேண்டாம்.
மனதை கொடுத்து துண்புறவும்
வேண்டாம்.
காற்றடைத்தபைக்குள்
இத்தனையும்.
வேண்டாம்.
rahini
germany.
இறைவன் ஒரு தபால்காரன் --விசாலம்
அன்புடன் விசாலம்
அம்மா - கதை சொல்லலாமா?-3
கதை 3
அந்தச் சிறுவனின் தாய் அழுது கொண்டிருந்தாள்.
"ஏனம்மா அழுகிறாய்?" என்று அந்தச் சிறுவன் தாயிடம் கேட்டான்.
"ஏனென்றால் நான் தாய்.," என்று தாய் சொன்னாள்.
"எனக்குப் புரியவில்லை," என்றான் பையன்.
தாய் அவனை அணைத்து உச்சிமோர்ந்து சொன்னாள், "அது உனக்கு எப்போதுமே புரியாது மகனே!"
உடனே அந்தச் சிறுவன் தன் தந்தையிடம் சென்று கேட்டான் "ஏன் அம்மா காரணமில்லாமல் அழுகிறாள்?"
"எல்லா தாய்மாரும் இப்படித் தான் காரணமேயில்லாமல் அழுவார்கள்," என்றார் அவனுடைய தந்தை அலட்சியமாக.
அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனானான். அப்போதும் அவனுக்குப் புரியவில்லை அவனுடைய அம்மா எதற்காக அழுகிறாள் என்று. உடனே அவன் கடவுளைக் கேட்டான் "கடவுளே! ஏன் எப்போதும் காரணமில்லாமல் தாய்மார் அழுகிறார்கள்T"
கடவுள் சொன்னார், "மகனே, தாய்மாரை நான் சிருஷ்டிக்கும் போது அவர்களை மிகச் சிறப்பானவர்களாகவும் விஷேஷத் தன்மையும் தரமும்ள்ளவர்களாகவும் சிருஷ்டித்தேன்.அவர்களது தோள்களுக்கு இவ்வுலகையே தாங்குமளவு சக்தியையும் அதே நேரம் இன்னொருவருக்கு அரவணைப்பாக சாய்ந்து கொள்ளப் போதுமான அளவுக்கு மென்மையையும் கொடுத்தேன். பிரசவ வேளைகளின் போது உருவாகும் வலியின் வேதனையை தாங்கிக் கொள்ளவும் பொறுத்துக் கொள்ளவும் கூடிய பக்குவத்தையும் , வலுவையும் அவர்களின் வலுவான மனதில் ஆழமான உறுதியாகவும், அவளுடைய இடுப்பெலும்புகளில் பலமாகவும் கொடுத்தேன்.அதே தாய்க
"அவளுடைய குடும்பத்தில் யாராவது ஒருவரோ அல்லது எல்லொருமேயோ வாழ்கையில் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் நிராசைகளாகி வாழ்கயில் வலுவிழந்து , தைரியமிழந்து, மனம் தளர்ந்து போகும் தருணங்களில் அவர்களை அரவணைத்து, ஆலோசனை வழங்கி, துவண்டு போகாமல் தைரியப்படுத்தி அவர்களை மீண்டும் வழி நடத்தும் திறமையையும், பொறுமையையும், நம்பிக்கையையும் , மன உறுதியையும் நான் தய்க்குக் கொடுத்தேன்.
"அவளுடைய குழந்தகளை அன்போடு பரமரிக்கவும் , அரவணைக்கவும், வளார்த்தெடுக்கவும் அவளுக்கு அன்பு செலுத்தும் மென்மையான இதயத்தையும் கொடுத்து பிற்காலத்தில் பிள்ளைகள் விடலைப் பருவத்துக்கேயுரிய அறியாமை, காலித்தனம், அலட்சியப்போக்கு, தாழ்வு மனப்பான்மை போன்ற கெடுபிடிகளில
"அதே போல் தான் அவர்களுக்கு கண்ணீரையும் கொடுத்தேன். அவர்களுடைய தாய்மை உணர்வுகளின் (இன்ப, துன்ப) உச்சைத்தை ஆற்றும் ஒரு வடிகாலாக. அது ஒன்று தான் நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் பலஹீனம். "
"மகனே! ஒரு தாயின் அழகு அவள் அணியும் உடைகளிலோ அவளது உடலமைப்பிலோ அல்லது அவளுடைய தலையலங்காரத்திலோ இல்லை. அம்மாவின் அழகு அவளுடைய ஆழமான கண்களில் தான் இருக்கிறது, ஏனெனில் அது தான் அவள் தன் குடும்பத்தினருக்காக வற்றாத வளமாக வைத்திருக்கும் அன்பும், பாசமும் குவிந்து கொட்டிக்கிடக்கும் அவளுடைய இதயத்துக்கான வாசல் கதவுகள்" என்றாராம் கடவுள்.அன்புடன்
சுவாதி.
அம்மா - கதை சொல்லலாமா?-2
கதை 2
கடவுள் அண்ட சராசரங்கள் சகலதையும் படைத்த பின் தாவரங்களையும் மிருகங்களையும் படைத்தாராம். தன்னால் உருவாக்கப்பட்ட அண்ட சராசரங்களும்,பூமியும், இயற்கையும் வெறுமையாய் இருப்பதாக நினைத்தாராம். அவற்றுள் பூமியை ஜீவ ராசிகள் வ
இதை கவனித்த பார்வதி "இத்தனை விந்தையான ஜீவராசிகளைப் படைத்தும் ஏன் திருப்தி படமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டாராம்.
"எத்தனையோ அழகழகான பறவைகளையும், அற்புதமான மிருகங்களையும் படைத்தாலும் இவற்றில் ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்கிறேன். என்னுடைய படைப்பில் இன்னும் முழுமையான திருப்தி தரும் ஒரு படைப்பை எப்படியாவது ஆக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கடவுள் சொன்னாராம்.
பரமசிவன் இப்படி சொன்னதும் பார்வதிக்கும் ஆர்வம் தாங்கவில்லையாம். அப்படி என்ன படைப்பை இவர் உருவாக்கப் போகிறார் பார்ப்போமே என்று இறைவனின் படைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாராம். கடைசியில் கடவுளும் மனிதனில் ஆணையும் பெண்ணையும் உருவாக்கினார்.
இந்தப் படைப்பில் அப்படி என்ன விசேடம் இருக்கிறது என்று பார்வதிக்கு ஒரே ஆவல்.
"மனிதப் படைப்பு மற்ற எல்லாவகை ஜீவ ராசிகளையும் விட ஒரு படி மேலாக எனக்குத் தெரிகிறது. இந்தப் பிறப்புக்கு மனம் என்ற ஒன்றைக் கொடுத்திருக்கிறேன். அத்துடன் இதற்கு மற்றைய படைப்புகளை விட மேலதிகமாக ஆறாவது அறிவையும் கொடுத்திருக்கிறேன். அதனால் இது எனக்கு முழுத் திருப்தியளிக்கும் என நினைக்கிறேன்" என்று சொன்னாராம் கடவுள்.
சிறிது காலம் சென்றதும் கடவுளுக்கு அந்தப்படைப்பிலும் ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்ந்தாராம். உடனே தான் படைத்த மானிடப் படைப்பில் பெண் பிறப்புக்கு "தாய்மை" என்ற உணர்வை உருவாக்கினாராம்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பார்வதிக்கு இவருடைய படைப்புகளின் சிறப்புகளை பூமிக்குப் போய் நேரேயே பார்க்க வேண்டுமென்ற ஆவால் வந்துவிட்டது. உடனே தம்பதி சமேதராய் பூலோகத்திற்கு வந்தனர்.
எல்லா ஜீவ ராசிகளையும் பார்வையிட்டுவிட்டு கடைசியில் மானிடப் பிறப்புகளைப் போய்ப் பார்த்து அவர்களின் குறைகளைக் கேட்டாராம். ஒவ்வொரு மானிடனும் தனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று சுயநலமாகக் கேட்டுக் கொண்டுருந்தனராம். கடைசியில் தான் படைத்த தாய்மை கொண்ட பெண்ணிடம் போன போது அத் தாய் அழுது கொண்டு இருந்தாராளாம்.
"ஏன் அழுகிறாய்? உனக்கு என்ன குறை?"என்று கடவுள் கேட்டாராம்.
"எனக்கு இரண்டு கைகள் போதவில்லை. என் பிள்ளைகளுக்காக நான் வேலை செய்ய வேண்டும்;இன்னும் இரண்டு கைகள்
சிறிது காலம் சென்றதும் திரும்பவும் பூலோகம் வந்த இறை தம்பதிகள் அந்தத் தாய் இப்போது எப்படி இருக்கிறாள் என்று பார்க்கப் போனார்களாம். அவள் அப்போதும் அழுதுகொண்டே இருந்தாளாம்.
"இப்போது ஏன் அழுகிறாய்?" -கடவுள்.
"என் பிள்ளைகளூக்காக ஓடி ஓடி உழைக்கிறேன். அதற்கு இந்த இரண்டு கால்களும் போதவில்லை. இன்னும் இரண்டு கால்கள் மேலதிகமாக இருந்தால் ந்ன்றாக இருந்திருக்குமே?" -தாய்.
"சரி அப்படியே ஆகட்டும்" என்று கூறிய கடவுள் அவள் விருப்பப்படி மேலதிகமாக இரண்டு கால்களை வழங்கிவிட்டு வானுலகம் போய்விட்டாராம்.
காலங்கள் உருண்டோடிப் போனது. திரும்பவும் நாலு கை நாலு கால் தாய் என்ன செய்கிறாள் என்று பார்க்க வேண்டுமென்று பார்வதி சொன்னாராம். சரி என்று கடவுளும் பார்வதியோடு பூலோகம் வந்தார். ந்ப்போது அந்தத் தாய் வயதானவளாய் , தலையெல்லாம் நரை விழுந்து, குழி விழுந்த கண்களோடு இருந்து அழுது கொண்டிருந்தாளாம்.
பார்வதிக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. "என்ன இது..இப்பொது இந்த தாயின் கண்ணீருக்கு யார் அல்லது எது காரணம்?" என்று இறைவனை வினாவினாராம்.
அதற்கு கடவுள் சொன்னார். "இம் முறை இந்தக் கண்ணீருக்கு நான் காரணமில்லை. அந்தக் கண்ணீருக்கு அவளுடைய பிள்ளைகள் தான் காரணம். வயதும், பருவமும் வரும் வரை அவர்களுக்கு தாயின் அரவணைப்பு தேவைப்பட்டது; தாயை கொண்டு எல்லாம் அனுபவித்தார்கள். இப்போது அவர்கள் தமது வாழ்கையை பார்க்க போய்விட்டார்கள்;தாயை மறந்து விட்டார்கள்..அதனால் தான் அவள் அழுது கொண்டிருக்கிறாள்" என்று சொன்னாராம்.
மனிதன் மிருகங்களிடமிருந்தும் மற்ற உயிரினங்களிடமிருந்தும் வேறுபட்டிருக்க வேண்டுமென்று அவனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவைக் கொடுத்தும் அவனால் தாய்மையின் மகிமையை உணரத் தெரியவில்லையே என்று விசனப்பட்ட ஆண்டவன் இப்படிபட்ட சுயநல மானிடப்பிறப்புகளுக்கு ஏன் விசேடமான நாலு கை நாலு கால்
*மேலதிகக் குறிப்பு:
லாஜிக் எல்லம் இந்தக் கதையில் பார்க்க வேண்டாம். ஏன் இந்துக் கடவுள் மட்டுமா உலகைப் படைத்தார் என்று தர்கம் செய்ய வேண்டாம்; ஒரு வேளை இந்தக் கதையை இய்ற்றியவர் இந்துவாக இருக்கலாம். இது என்னுடைய கதை அல்ல..இன்று ஒரு தகவல் நிகழ்சியில் தென்கச்சி சுவாமிநாதன் சொன்ன கதை இது.
அன்புடன்
சுவாதி.
யோக வாழ்க்கை -2 - இரா. ஆனந்தன்
தான், சமுதாயம், இயற்கை என்ற மூன்றின் இணைப்பில்
நடைபெறுவதே வாழ்க்கை. ஒருவர் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
சமுதாயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இயற்கையைப் பற்றித்
தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றோடு ஒத்து இணைந்து வாழும்போது, வாழ்க்கை
செம்மை பெறும். வெற்றி பெறும்; மகிழ்ச்சி கிட்டும். ஒருவர் அற வாழ்க்கை
வாழ வேண்டும். அற வாழ்க்கை என்பது ஒழுக்கம் கடைபிடித்து வாழ்தலாகும்.
ஒழுக்கம் என்பது தனக்கோ. பிறருக்கோ, உடலுக்கோ, மனத்திற்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, எண்ணம், சொல், செயலால், தீங்கு நேராமல் வாழ்வது ஆகும்.
இதைத்தான் வேதாத்திரிய யோக வாழ்க்கைக் கல்வி அளிக்கிறது.
ஓதி உணர்தல், உணர்ந்து ஓதுதல் எனக் கல்வி அறிவின் பயன் இரு வகைப்படும்.
மற்றவர் கற்றுக் கொடுத்து ஒருவர் தெரிந்து கொள்ளுதல் ஓதி உணர்தல் ஆகும்.
தானே உணர்ந்து பிறர்க்கு வழி காட்டுதல் உணர்ந்து ஓதுதல் ஆகும். உணர்ந்து ஓதுவதே உள்ளுணர்வுக் கல்வி ஆகும். விவேகானந்தர் கூறுவதும் இந்த
உள்ளுணர்வுக் கல்வியேயாகும். ஒருவர் பிறருக்கு மொழி மூலம் உணர்த்தி ஒருசெய்தியைச் சொல்லும்போது அல்லது தத்துவத்தைப் போதிக்கும் போது அதனைக்கல்வி (Tution ) என்று சொல்லுவார்கள். இதே கல்வி வான்காந்தத்தின் மூலம் அகத்துணர்வாகக் கிடைத்ததென்றால் அதனை உள்ளுணர்வு (Intuition )என்பார்கள். பொதுவாக, வெளியே வாய் மூலம் கற்றுக் கொள்ளும் கல்வி சிறிய அளவிலேதான் அமையும். உள்ளுணர்வின் மூலம் பெறும் கல்வியோ பல மடங்கு உயர்ந்ததாக அமையும். எனவே அகத்தவம் செய்ய வேண்டும் அத்தகைய குண்டலினி யோகச் (தவத்தில் சிறந்த) சாதனையாளர்களுக்கு உள்ளுணர்வு ஆற்றல் (Intuition
Knowledge ) இயல்பாக உண்டாகும். இதனால் யார் யாரோ, எந்தெந்த இடத்திலோ சிந்தித்து, கண்டுபிடிக்கக்கூடிய உண்மைகள் எல்லாம் இவரிடம் உள்ளுணர்வாக வந்து சேரும்.
(வளரும்)
குயில் தரும் சின்னசின்ன தூறல்கள
என் மேனிகளைநனைத்து..
விட்டபொழுது..
குளிர் காயத்துடிக்கும் என்...
கண்களை மின்சாரமாய்
பார்க்கின்றான
உன் இரு கருவிழிகள
நிலவாக நான்
இருக்க வேண்டும்
என்னை நீ..பார்ப்பதற்காய்
நெருப்பாக நான்
மாறவேண்டும்
மழையாய் நீ என்னை
அணைப்பதற்காய்
முடிந்து போகும்
பாதையில் கூட..
என் கால்சுவடுகள்
மட்டும்..
இன்று வரை காதல்
உன் பாதை முழுதும்
பூக்களாக மலரும
ராகினி
ஜெர்மனி.
குயிலின் கவிதைகள் - குயிலின் முத்தம்
உன் முத்தப்புயலின் வேகத்தில்
கூட்டுக் குடும்பதினம்!
யோக வாழ்க்கை - இரா. ஆனந்தன்
மனிதகுல மேம்பாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்து தொண்டாற்றிய மாமனிதர்அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். மனித குலம் அமைதியோடும், நிறைவோடும், அன்போடும், ஒற்றுமையோடும் வாழ வேண்டும். போரில்லா நல்லுலகம் அமைய வேண்டும். உலகம அமைதி பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே சதா சிந்தித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் வந்தார்கள். மனிதகுல மேம்பாட்டிற்காக இந்த நூற்றாண்டில் இறையருளின் கொடையே அருள்தந்தைஅவர்கள்.
பாமரனையும் சிந்திக்க வைக்கின்ற அவரது படைப்புகள் ஏராளம். இதுவரை
தமிழிலும், ஆங்கிலத்திலும் 90க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இயற்கையையும், தனிமனிதனையும், சமுதாயத்தையும் நன்கு ஆராய்ந்து அவற்றின் சிக்கல்களையும், அதை நீக்கும் தீர்வுகளையும் செயல் திட்டங்களாகக் கொடுத்து உள்ளார்கள். அவரது தியானத்தில், ஞானத்தில் உதித்த இயற்கை உண்மைகளையும், மனித குலம் அவைகளை மதித்து நடக்க வேண்டிய வழிமுறைகளையும், வாழ்க்கைக் கல்வியாக பயிற்சி முறைகளாகக் கொடுத்துள்ளார்கள். மொழிக்கல்வி, தொழிற்கல்வி மட்டும் போதாது. இயற்கைத் தத்துவம் பற்றிய கல்வியும், ஒழுக்க பழக்கக் கல்வியும் அவசியம் என்பதை வலியுறுத்தி அதற்கு ஏற்ப உடற்பயிற்சி, தியானம், காயகல்பம், அகத்தாய்வு போன்ற பயிற்சிகளை வடிவமைத்தார்கள்.
இத்தகையக் கல்வியின் சிறப்பம்சத்தைப் பற்றிய விளக்கங்களைத் தொடர்
கட்டுரையாக எழுதுகின்றேன். என்னாலியன்ற அளவு மகரிஷியின் கருத்துக்களைத் தர முயற்சிக்கின்றேன்.
(வளரும்)
பாலமுரளி-கவிதைகள்
நண்பா!
நீ இருப்பதானால்
நான் வருந்துவதில்லை
எதற்கும்...
எனக்கு எல்லாம் வல்ல
ஒரு சகோதரன் இருப்பதாக..
கமல் கவிதைகள்
வலியை பொருட்படுத்தாமல்
கூறும் மகளை உச்சி முகர்ந்தாள்..
தாலியற்ற வெறும் கழுத்தை தடவும்
அந்த ஈழத்தாயின் மனதில் ஆயிரம் கேள்விகள்??
அதன் கரு ஒன்றே..
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்??"
--
நட்புடன்,
கமல்
ஸ்வாதி- கவிதைகள்
-----------------
புருஷன் என்ற உறவுக்காக
வேலைக்காரி எஜமானனுக்குக்
கொடுத்த ஊதியம் (ஜாஸ்தி தான்)!
கல்யாணச் சந்தையில்
தம்மை மாடுகளாக
அறிமுகப் படுத்த உதவிய
அட்சாரம்!
பெண் மகவை
பிரேத பரிசோதனைக்கு
தயார்படுத்தும்
பிரேரணை!
இவன் பிறந்ததும்
அம்மாவின் மனதில் கணக்குப்பார்க்கப் பட்ட
கணிசம்!
இரண்டு குடும்பங்கள் சேர்ந்து
இவனுக்குக் கூறிய
ஏலம்!
அவனுடைய
முதுகெலும்பின் ஓட்டைகளை
கணக்குப் பார்த்த
கைத்தடி!
தாம்பத்தியம் என்ற திரைமறைவில்
ஓர் ஆண்விபச்சாரி
தனக்கு நிர்ணயித்த
ஆயுள் விலை
கமல் கவிதைகள்
விவசாயின் மனதில் புன்சிரிப்பு..
நனைந்த உடையுடன் குழந்தைகள்..
ஜன்னலோர மழைத்துளியில் அழகான பிம்பங்கள்..
ரசிக்க இத்தனை இருக்க,
காவிரித்தாயின் மனதில் தீராத கேள்வி??
"எந்த மகனின் தாகத்தை தீர்ப்பேன்!!"
--
நட்புடன்,
கமல்
அம்மா கதை சொல்லலாமா..?
தாய்க்கு ஒரே ஒரு மகன்; அவனை அந்தத் தாய் தன் உயிராக வளர்த்தாள்;
மகனுக்காகவே உயிர் வாழ்ந்தாள். அவனுக்கு திருமணம் நடந்தது. மனைவியும்வந்தாள்; காதல் தெரிந்தது மகனுக்கு; தாய் பாசத்தை அது மறைத்தது; தாயைவிட்டு விலகினான் மகன். மனைவியுடன் தனிக் குடித்தனம் போனான்.
அவன் மனைவி மிகவும் பேராசைகாரி; அதனால் அவனும் மனைவி ஆசைப்பட்டதெல்லாம் அவள் காலடியில் சமர்ப்பித்தான்; ஆனாலும் மனைவியின் ஆசை தீரவில்லை;
கடைசியில் அவள் தன் கணவனிடம் கணவனின் தாயின் இதயம் வேண்டும் என்று கேட்டாள்; அவன் தாமதிக்காமல் தாயைக் கொன்று அவள் இதயத்தை எடுத்துக் கொண்டு வரும் வழியில் கல் தடுக்கி கீழே விழுந்தான். அவன் கையிலிருந்த அந்த தாயின் இதயம் கீழே விழுந்தது. துடித்தது வலியினால் அல்ல. மகனின் காலில் கல் அடித்துவிட்டதாம்...அதனால்.
ஐயோ மகனே..வலிக்கிறதா என்று தாயின் இதயம் கதறியதாம்..
மகன் ஒதுக்கிய போதும் , மகன் தன்னை மறந்த போதும் கூட தாங்கிக் கொண்ட தாய் அவன் காலில் கல் அடிபட்டது கண்டவுடன் பதறி போனது; கண்ணீர் விட்டது.
இது வெறும் கதை தான்; ஆனால் ஒரு தாயின் பாசம் எத்தகையது என்பதை எடுத்துக் காட்டுவதற்காக சொல்லப்பட்டது.
தான் துன்புற்றாலும் தன் பிள்ளைகளின் நலனுக்காகத் தாயனவள் தன் உயிரையும் கொடுப்பாள் என்பது உலகமே ஒப்புக் கொண்ட விசயம்.
அத்தைகைய தாய்மார்களை மரியாதை செய்யும் முகமாக மே மாதத்தின் 2ம்
ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தன் உடம்பில் எம்மை சுமந்து, தன் உடலைக் கிழித்து எம்மை வெளியே கொடுத்து, தன் இரத்தத்தை பாலாக்கி எமக்கு உணவளித்த தேவதைக்கு இந்த ஒரு நாளாவது நாம் சேவை செய்யதால் என்ன? சேவித்தால் என்ன?'
தாயை மதிக்காதவனை கடவுள் மன்னிக்கமாட்டார்.!
அன்புடன்
சுவாதி.
ஒரு திடீர் நேர்முகம்
"என்னைத் தெரியவில்லையா. ரொம்ப வேடிக்கை தான்"
"ஓஹோ.. அவ்வளவு பெரிய ஆளா நீ ?"
"சரி. உனக்கு புரிகிற மாதிரி சொல்கிறேன். யாரையாவது காதலிக்கிறாயா? "
" ஏய். ய்.. அது என் சொந்த சோகம். அதைப்பற்றி உனக்கென்ன ?"
"முட்டாளே... உன் காதலின் வெற்றி என் கையில் இருக்கிறது"
(சற்று பயத்துடன் ) " நீ என்ன கடவுளா? "
"கிட்டத்தட்ட..
அடுத்த நொடி உன் அம்மாவிடம் பேச வேண்டுமா..
காதலியிடம் கதைக்க வேண்டுமா
கண்களில் காதல் வழிய சிரிக்கின்ற உன் காதலியின் உருவத்தை மறுபடி மறுபடி
பார்க்க வேண்டுமா
கவிதை என்கிற பெயரில் நீ கிறுக்குவதை அவளுக்கு அனுப்ப வேண்டுமா
கடிகாரத்தில் போல காலம் காட்ட வேண்டுமா
இன்று தேதி என்ன தெரியுமா
உன்னை நீயே புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டுமா
உனக்குப் பிடித்த 'தமிழ்ச்செல்வி' பாடலை இப்போதே கேட்க வேண்டுமா
எல்லாம் செய்து காட்டுவேன்"
"ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது"
"இதிலென்ன ஆச்சர்யம். சினிமா, தொலைக்காட்சி எல்லாம் காட்டுவேன்"
"நீ தனி ஆளா ?"
"பெரிய கூட்டமே இருக்கிறோம், உலகில் நாங்கள் இல்லாத இடமே இல்லை. உன்
பாக்கெட்டில் கூட என் போல் ஒருவன் இருப்பான்"
" ஓ..நீ..கைபேசியா !!! "
"புரிந்து கொள் முட்டாளே...உலகெங்கும் நீக்கமற நிறைந்து நினைத்த
நேரத்தில் எதுவும் செய்கிறவர்கள் நாங்கள். நீ படித்த தமிழையெல்லாம்
பயன்படுத்தி கொஞ்சம் காதலையும் சேர்த்து ஒரு குறுந்தகவல் தயார் செய்.
உடனே உன் காதலியிடம் சேர்க்கிறேன். வாழ்க உன் காதல். இனிமேலாவது என்னைகும்பிடு. வளம் பெறுவாய். வரட்டுமா ?"
--ராஜன்(சுந்தர்)
அன்னையர் தின வாழ்த்துக்கள்!
ஆண்டவனால் அவனுடைய பிரதிநிதியாக பூமிக்கு அனுப்பி வைக்கப் பட்ட தேவதை!
எத்தனையோ இனங்கள் , மொழிகள் , மதங்கள், நாடுகள் ஏன் பலவிதமான ஜீவராசிகளாய் வேறுபட்டாலும் அம்மா என்ற ஆத்மார்த்த உறவிலும் தாய்மை என்ற மாசற்ற உணர்விலும் பேதமையே இல்லை!
அத்தகைய புனிதமான ஆத்மாக்கள் அனைவரின் காலடிகளிலும் என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
வாழ்த்துக்கள்!
அன்புடன்
சுவாதி!!இது முன்பே எழுதியதுதான்.
ஆனாலும் இங்கே பொருத்தமாக இருக்கும்னு போட்டேனுங்க...
உலகிலேயே...
மிகவும் அழகானது பூ
மிகவும் அதிசயமானது தாஜ்மஹால்
மிகவும் பிரகாசமானது சூரியன்
மிகவும் குளுமையானது நிலவு
மிகவும் தெளிவானது நதி
மிகவும் இனிமையானது தென்றல்
ஆனாலும்...
இவை எதுவும் ஈடு இல்லை
எனது அம்மாவின்
எல்லாம் வல்ல அன்பிற்கு!
தமிழுக்கும் அமுதென்று பேர்!
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
--
- பாவேந்தர் பாரதிதாசன்
மானிட சக்தி -பாரதிதாசன்
வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு
மானிடத் தன்மையை நம்பி - அதன்
வன்மையினாற்புவி வாழ்வுகொள் தம்பி!
'மானிடம்' என்றொரு வாளும் - அதை
வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்
வானும் வசப்பட வைக்கும் - இதில்
வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும் (மானிட)
மானிடன் வாழ்ந்த வரைக்கும் - இந்த
வையத்திலே அவன் செய்தவரைக்கும்
மானுடத் தன்மைக்கு வேறாய் - ஒரு
வல்லமை கேட்டிருந்தால் அதைக் கூறாய்!
மானிட மென்பது புல்லோ? - அன்றி
மரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ?
கானிடை வாழ்ந்ததும் உண்டு - பின்பு
கடலை வசப்படச் செய்ததும் அதுதான்! (மானிட)
மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு
மானிடம் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்;
மானிடம் என்பது குன்று - தனில்
வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று
மானிடருக் கினி தாக - இங்கு
வாய்த்த பகுத்தறி வாம்விழி யாலே
வான்திசை எங்கணும் நீ பார்! - வாழ்வின்
வல்லம 'மானிடத் தன்மை' என்றேதேர். (மானிட)
தமிழ் பிரவாகத்திற்கு... ஆசிகள்
தமிழ்மொழி வாழ்த்து
தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!
தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
கென் கவிதைகள்
வாழ்வு எவ்வாறு போகிறதென?
பதில் கூற தொண்டைக்குழிக்குள்
அமிலம் தோய்கிறது வார்த்தைகளின் மேல்
வெடித்துக்கொல்லும் வாதங்களின் வலி
நன்கறிந்தவன் நான்.
வார்த்தைகளைக் கொன்றபடி மெளனங்களை
பிரசவிக்கிறேன் புன்னகையேந்தி,
மீண்டும் முயல்கிறாய் என் மெளனத்தைக்
கொல்வதற்காய்...
சூன்யம் புடைசூழ வெறித்தப்பார்வைகளுடன்
புன்னகை வெற்றிக் கொள்கிறது...
பாரதியின் தமிழ் பாட்டு
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.