Sunday, June 17, 2007

இறைவன் ஒரு தபால்காரன் --விசாலம்

இறைவன் ஒரு தபால்காரன்,
கடிதம் அளிப்பது
அவன் வேலை,
நல்ல செய்தியா,
அவன் பார்ப்பதில்லை,
கெட்ட செய்தியா?
கவலையில்லை,
பாராட்டுவதுமில்லை,
நிந்திப்பதும் இல்லை,
தபால் கொடுப்பது
அவன் கடமை,
அதை அனுபவிப்பது
நாம் மட்டும் தான்,
அவரவர் வினை அவரவர் அறுக்க,
இறைவன் எங்கே நடுவில் வருவார்?

அன்புடன் விசாலம்

No comments: