Sunday, June 17, 2007

கென் கவிதைகள்

வெடித்திட்ட எரிமலையாய் கோபம்,
அனல்குழம்பாய் வார்த்தைகளை மூழ்கடிக்கிறது!
தனிமைப்பாதையில் வெறி கொண்டோடி,
நட்பை பொசுக்கி பசிதீர்க்கிறது.
ஆறிப்போன பின்னே மெல்ல
அமைதி சாம்பல் துடைத்துயர்கிறது.

இப்போது எரிமலை உறங்குகிறதாம்,
எனைப்போல் மெளனத்தில் ஒளிந்தபடி...


No comments: