"யார் நீ ?"
"என்னைத் தெரியவில்லையா. ரொம்ப வேடிக்கை தான்"
"ஓஹோ.. அவ்வளவு பெரிய ஆளா நீ ?"
"சரி. உனக்கு புரிகிற மாதிரி சொல்கிறேன். யாரையாவது காதலிக்கிறாயா? "
" ஏய். ய்.. அது என் சொந்த சோகம். அதைப்பற்றி உனக்கென்ன ?"
"முட்டாளே... உன் காதலின் வெற்றி என் கையில் இருக்கிறது"
(சற்று பயத்துடன் ) " நீ என்ன கடவுளா? "
"கிட்டத்தட்ட..
அடுத்த நொடி உன் அம்மாவிடம் பேச வேண்டுமா..
காதலியிடம் கதைக்க வேண்டுமா
கண்களில் காதல் வழிய சிரிக்கின்ற உன் காதலியின் உருவத்தை மறுபடி மறுபடி
பார்க்க வேண்டுமா
கவிதை என்கிற பெயரில் நீ கிறுக்குவதை அவளுக்கு அனுப்ப வேண்டுமா
கடிகாரத்தில் போல காலம் காட்ட வேண்டுமா
இன்று தேதி என்ன தெரியுமா
உன்னை நீயே புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டுமா
உனக்குப் பிடித்த 'தமிழ்ச்செல்வி' பாடலை இப்போதே கேட்க வேண்டுமா
எல்லாம் செய்து காட்டுவேன்"
"ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது"
"இதிலென்ன ஆச்சர்யம். சினிமா, தொலைக்காட்சி எல்லாம் காட்டுவேன்"
"நீ தனி ஆளா ?"
"பெரிய கூட்டமே இருக்கிறோம், உலகில் நாங்கள் இல்லாத இடமே இல்லை. உன்
பாக்கெட்டில் கூட என் போல் ஒருவன் இருப்பான்"
" ஓ..நீ..கைபேசியா !!! "
"புரிந்து கொள் முட்டாளே...உலகெங்கும் நீக்கமற நிறைந்து நினைத்த
நேரத்தில் எதுவும் செய்கிறவர்கள் நாங்கள். நீ படித்த தமிழையெல்லாம்
பயன்படுத்தி கொஞ்சம் காதலையும் சேர்த்து ஒரு குறுந்தகவல் தயார் செய்.
உடனே உன் காதலியிடம் சேர்க்கிறேன். வாழ்க உன் காதல். இனிமேலாவது என்னைகும்பிடு. வளம் பெறுவாய். வரட்டுமா ?"
--ராஜன்(சுந்தர்)
Sunday, June 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment