Sunday, June 17, 2007

யோக வாழ்க்கை - இரா. ஆனந்தன்

வாழ்க வளமுடன். தமிழ் பிரவாக அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
மனிதகுல மேம்பாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்து தொண்டாற்றிய மாமனிதர்அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். மனித குலம் அமைதியோடும், நிறைவோடும், அன்போடும், ஒற்றுமையோடும் வாழ வேண்டும். போரில்லா நல்லுலகம் அமைய வேண்டும். உலகம அமைதி பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே சதா சிந்தித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் வந்தார்கள். மனிதகுல மேம்பாட்டிற்காக இந்த நூற்றாண்டில் இறையருளின் கொடையே அருள்தந்தைஅவர்கள்.

பாமரனையும் சிந்திக்க வைக்கின்ற அவரது படைப்புகள் ஏராளம். இதுவரை
தமிழிலும், ஆங்கிலத்திலும் 90க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இயற்கையையும், தனிமனிதனையும், சமுதாயத்தையும் நன்கு ஆராய்ந்து அவற்றின் சிக்கல்களையும், அதை நீக்கும் தீர்வுகளையும் செயல் திட்டங்களாகக் கொடுத்து உள்ளார்கள். அவரது தியானத்தில், ஞானத்தில் உதித்த இயற்கை உண்மைகளையும், மனித குலம் அவைகளை மதித்து நடக்க வேண்டிய வழிமுறைகளையும், வாழ்க்கைக் கல்வியாக பயிற்சி முறைகளாகக் கொடுத்துள்ளார்கள். மொழிக்கல்வி, தொழிற்கல்வி மட்டும் போதாது. இயற்கைத் தத்துவம் பற்றிய கல்வியும், ஒழுக்க பழக்கக் கல்வியும் அவசியம் என்பதை வலியுறுத்தி அதற்கு ஏற்ப உடற்பயிற்சி, தியானம், காயகல்பம், அகத்தாய்வு போன்ற பயிற்சிகளை வடிவமைத்தார்கள்.

இத்தகையக் கல்வியின் சிறப்பம்சத்தைப் பற்றிய விளக்கங்களைத் தொடர்
கட்டுரையாக எழுதுகின்றேன். என்னாலியன்ற அளவு மகரிஷியின் கருத்துக்களைத் தர முயற்சிக்கின்றேன்.

(வளரும்)

No comments: