Sunday, June 17, 2007

யோக வாழ்க்கை -3&4 - இரா. ஆனந்தன்

3. வாழ்க வளமுடன்: இது எவ்வாறு வந்து சேருகிறது? தவத்தில் சிறந்த
சாதனையாளர் பல நிலைகளில் மன அலைச் சுழலைத் தவத்தினால் பழக்கி வைத்துக் கொள்கிறார். இவர் ஆல்பா அலை (விநாடிக்கு 8 - 14 சுழல்) தீட்டா அலை (விநாடிக்கு 4 - 7 சுழல்), டெல்டா அலை (விநாடிக்கு 1 - 3 சுழல்) என்று பல நுண்ணிய அலைகளில் அகத்தவம் பழகுகிறார். இதனால், இவரது மனம் மிகவும் நுண்ணிய சுழல் விரைவு நிலையில் பெரும்பாலும் இயங்கிக் கொண்டிருக்கும்.
எனவே இந்த மன அலைச் சுழல் நிலைக்கு மேலான விரைவு அலைச்சுழல் இயங்கும் நிலையில் அல்லது அதே சுழல்விரைவு நிலையில், யார் ஒருவர் ஆழ்ந்தசிந்தனையின் மூலம் ஒரு விஞ்ஞான உண்மையையோ, தத்துவ உண்மையையோ, மேலும் இயற்கை ரகசியங்களையோ உணர்ந்து கொண்டால், அது இவர் மனத்தில் தானாகப் பிரத்பலிக்க அதனை உள்ளுணர்வாகப் பெறுகிறார்.


எதையாவது உணரவேண்டும் என்றூ சொன்னால் அதைவிட நுண்ணிய நிலையில் இருந்தால்தான் உணர முடியும். அதற்கு ஆங்கிலத்தில் சரியான அர்த்தத்துடன் 'Understand' என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. 'Understand' என்றால் 'You stand under ' என்பதாகும்."புரிந்து கொள்" என்பதற்கு "அடியில் நில்" என்று பொருள். எந்த ஓர் இயக்கம் நடந்தாலும், அதைவிட நுண்ணிய நிலைக்கு வந்தால்தான் அதை உணர முடியும் மன அலையை விநாடிக்கு 1 - 3 சுழல் விரைவு என்ற டெல்டா அலைக்குக் கொண்டு வருகின்றபோது எல்லாவற்றையும் உணர முடிகிறது. மேட்டிலே இருக்கும் நீர் பள்ளம் போய்ச் சேர்வதுபோல், மனம் அகண்டாகாரத்தில் (சுத்தவெளியில்) இருக்கும்போது இயற்கை ரகசியங்கள் உள்ளுணர்வாய் மலரும்.
*************************************************************************************

4. வாழ்க வளமுடன்: வேதாத்திரிய மன வளக்கலை ::.. வேதாத்திரி மகரிஷி
உணர்ந்து ஓதுபவர். அவர் உலக நலனில் அக்கறை கொண்டு எண்ணிய
சிந்தனைகளுகெல்லாம் தன் உள்ளிருந்து வந்த விடைகள் அனைத்தையும்
வெளியிட்டுள்ளார். இதுவரை வந்த பல சிந்தனையாளர்களின் கருத்துக்களை
எல்லாம் உள்ளடக்கி, அவற்றுடன் தனது அனுபவத்தையும் சேர்த்து ஒரு முறையான
அடித்தளமாக அமைத்துள்ளார். அக்கருத்துக்களின் தொகுப்பே வேதாத்திரிய
வாழ்க்கை நெறியாகும். இதில் இறையுணர்வு, அறநெறி வற்புறுத்தப்படுகின்றன.
இறைநிலை என்பது சுத்தவெளி. அந்தச் சுத்தவெளியை உணர்வதே இறையுணர்வு.
அறநெறி என்பது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் இணந்த வாழ்க்கை நெறி.;
தனி மனித மேம்பாட்டுக்கு ஐந்தொழுக்கப் பண்பாடும், உடல் நலம் பெற எளியமுறை உடற்பயிற்சிகளும், உயிர் நலம் பெற காயகல்பப் பயிற்சியும், மனத்தை ஒழுங்குபடுத்தத் தவமும், தன்னைத் திருத்திக்கொள்ள அகத்தாய்வுப் பயிற்சியும், நான் யார் என அறிந்து, இறைநிலையை உணர்ந்து, ஞானத்தை வளர்த்துக் கொள்ளத் தத்துவ விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன. தான் வாழுகின்ற உலகத்தில் மற்ற உயிர்களுடன் ஒத்து வாழ்வதற்குப் பதினான்கு வேதாத்திரிய நன்னெறிகள் கற்றுத் தரப்படுகினறன. கல்வியில் ஒழுக்கத்தின் அவசியமும், அதனை வள்ளுவம் சொல்லுவதுபோல் நடைமுறைக்குக் கொண்டுவரவும், அதுவே பழக்கமாக மாறவும், "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்கின்ற அவ்வையின் கூற்றுக்கு இணங்க, அரிதான மானிடப் பிறவியை
மேம்படுத்தவும், முழுமை பெறவும்,, இயற்கைத் தத்துவ அறிவையும், ஒழுக்கப் பழக்கங்களையும் வழங்க இக்கலை உருவாக்கப் பட்டுள்ளது. இது போதனை மார்க்கம் மட்டுமல்ல சாதனை மார்க்கமுமாகும்.


வேதாத்திரி மகரிஷி சென்னைக்கு அருகிலுள்ள கூடுவாஞ்சேரி கிராமத்தில்
1911ம் ஆண்டு ஆகஸ்டு 14ம் நாள் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார்.
இறைநிலை தெளிந்த மாமனிதர். தனிமனித அமைதி மூலம் குடும்பம், சுற்றத்தார், ஊரார், உலகோர் அமைதியோடு வாழ வழிகாட்டுகின்ற பெருந்தகை. மக்களனைவரும் இறையுணர்வு பெற்று, அன்பும் அறநெறியு, ஓங்கி வாழ வகை செய்துள்ளார். பாமர மக்களும் எளிமையாகக் கற்று வழ்க்கியில் பின்பற்றும் வகையில் பயிற்சிகளை வடிவமைத்துள்ளார். தத்துவத்தில் அத்வைதத்தையும், யோகத்தில் ராஜயோகத்தையும் இணைத்து பாமர மக்களும் உணர்ந்து கொள்ளூம் வகையில் அவர்
கற்பிக்கும் அகத்தாய்வுப் பயிற்சிக:ள் அமைந்திருப்பதால், அவர் "பாமர
மக்களின் தத்துவ ஞானி"(Common Man's Philosopher) என்று
அழைக்கப்படுகிறார். மெய்ஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் ஒருங்கிணைத்து விளக்குகிறார். மகரிஷி வெளியிட்டுள்ள எந்த ஒரு கருத்தும் பகுத்தறிவிற்கோ, விஞ்ஞானத்திற்கோ புறம்பானதன்று. தமிழில் நேரடியாகத் தோன்றாத குறையைப்போக்கி, தான் அகக் காட்சியாக உணர்ந்த கருத்துக்களைக் கவிதைகளாகவும், உரைநடை நூல்களாகவும் எளிய தமிழில் அலித்துள்ளார். மகரிஷியின் 92- வது பிறந்த நாளையொட்டி ஆழியாறு அறிவுத் திருக்கோவிலில் நடைபெற்ற உலக அமைதி மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நேரில் கலந்து கொண்டு, அருள்தந்தையின் உலக சமாதானத் திட்டத்தைப் பெற்றுச்
சென்றது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.(வளரும்)

************************************************************************************

No comments: