Sunday, June 17, 2007

அம்மா கதை சொல்லலாமா..?

கதை 1

தாய்க்கு ஒரே ஒரு மகன்; அவனை அந்தத் தாய் தன் உயிராக வளர்த்தாள்;
மகனுக்காகவே உயிர் வாழ்ந்தாள். அவனுக்கு திருமணம் நடந்தது. மனைவியும்வந்தாள்; காதல் தெரிந்தது மகனுக்கு; தாய் பாசத்தை அது மறைத்தது; தாயைவிட்டு விலகினான் மகன். மனைவியுடன் தனிக் குடித்தனம் போனான்.

அவன் மனைவி மிகவும் பேராசைகாரி; அதனால் அவனும் மனைவி ஆசைப்பட்டதெல்லாம் அவள் காலடியில் சமர்ப்பித்தான்; ஆனாலும் மனைவியின் ஆசை தீரவில்லை;
கடைசியில் அவள் தன் கணவனிடம் கணவனின் தாயின் இதயம் வேண்டும் என்று கேட்டாள்; அவன் தாமதிக்காமல் தாயைக் கொன்று அவள் இதயத்தை எடுத்துக் கொண்டு வரும் வழியில் கல் தடுக்கி கீழே விழுந்தான். அவன் கையிலிருந்த அந்த தாயின் இதயம் கீழே விழுந்தது. துடித்தது வலியினால் அல்ல. மகனின் காலில் கல் அடித்துவிட்டதாம்...அதனால்.

ஐயோ மகனே..வலிக்கிறதா என்று தாயின் இதயம் கதறியதாம்..

மகன் ஒதுக்கிய போதும் , மகன் தன்னை மறந்த போதும் கூட தாங்கிக் கொண்ட தாய் அவன் காலில் கல் அடிபட்டது கண்டவுடன் பதறி போனது; கண்ணீர் விட்டது.

இது வெறும் கதை தான்; ஆனால் ஒரு தாயின் பாசம் எத்தகையது என்பதை எடுத்துக் காட்டுவதற்காக சொல்லப்பட்டது.

தான் துன்புற்றாலும் தன் பிள்ளைகளின் நலனுக்காகத் தாயனவள் தன் உயிரையும் கொடுப்பாள் என்பது உலகமே ஒப்புக் கொண்ட விசயம்.

அத்தைகைய தாய்மார்களை மரியாதை செய்யும் முகமாக மே மாதத்தின் 2ம்
ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தன் உடம்பில் எம்மை சுமந்து, தன் உடலைக் கிழித்து எம்மை வெளியே கொடுத்து, தன் இரத்தத்தை பாலாக்கி எமக்கு உணவளித்த தேவதைக்கு இந்த ஒரு நாளாவது நாம் சேவை செய்யதால் என்ன? சேவித்தால் என்ன?'

தாயை மதிக்காதவனை கடவுள் மன்னிக்கமாட்டார்.!



அன்புடன்

சுவாதி.

No comments: