வெகு இயல்பாய் வினவுகிறாய்,
வாழ்வு எவ்வாறு போகிறதென?
பதில் கூற தொண்டைக்குழிக்குள்
அமிலம் தோய்கிறது வார்த்தைகளின் மேல்
வெடித்துக்கொல்லும் வாதங்களின் வலி
நன்கறிந்தவன் நான்.
வார்த்தைகளைக் கொன்றபடி மெளனங்களை
பிரசவிக்கிறேன் புன்னகையேந்தி,
மீண்டும் முயல்கிறாய் என் மெளனத்தைக்
கொல்வதற்காய்...
சூன்யம் புடைசூழ வெறித்தப்பார்வைகளுடன்
புன்னகை வெற்றிக் கொள்கிறது...
Sunday, June 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment