Sunday, June 17, 2007

கென் கவிதைகள்

கோயில் நுழையும் புறாக்களின்
சிறகசைப்பாய்,
மனதுக்குள் குதியாட்டமிடுகிறாய்.
காத்திருந்த பகல்களின்
கானல் நீரில்,
இரவுகள் ஒளியிழக்க
முலாமிழந்த கண்ணாடியாய் என்
மனம் தொலைந்திடுகிறது.

கூட்டில் பசிதுடிக்கும் சிறுபறவையாய்,
தத்தித்துடிக்கிறது என் காதல்...
வல்லூறுக்களின் பிடியில் சிக்கிக்கொண்ட
தாய்ப்பறவையின் நிலையறியாமல்..

No comments: