Friday, June 8, 2007

உயர்வு செய்வோம்!


(தமிழ் பிரவாகத்துக்கு என் முதல் கவிதை தமிழோடு துவங்க விரும்பி இதனை
இங்கே இடுகின்றேன்!)
* தாய்மொழி தமிழினை
தழைத்திடச் செய்வோம்!
நாளைய சரித்திரம்
தமிழினில் செய்வோம்!
*உண்மையும், நன்மையும்
உயர்ந்திடச் செய்வோம்!
பொய்மையும், தீமையும்
அழிந்திடச்செய்வோம்!
• கயைமையும், வஞ்சமும்
களைந்திடச்செய்வோம்!
வலிமையில் நெஞ்சினை
உயர்ந்திடச்செய்வோம்!
• வறுமையும், பஞ்சமும்
ஒழிந்திடச்செய்வோம்!
செழுமையில் உலகம்
மகிழ்ந்திடச் செய்வோம்!

No comments: