Saturday, June 2, 2007

ஔவை வேதம்....

ஔவயாரின் பாடல்களை இங்கு பாலகர்களுக்காக தர எண்ணுகின்றோம். புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் தற்போதைய ஆதங்கமும், ஐயப்பாடும் என்னவென்றால் தங்களது பிள்ளைகளுக்கு தாய் மொழியான தமிழ் தெரியாமல் போய்விடுமோ என்பது தான். இந்த ஆதங்கம் தீரப்பட வேண்டுமானால் பெற்றோர்கள் தான் முயற்சி செய்ய வேண்டும். பிள்ளைகளுக்கு தமிழ் மொழி கற்றுத் தர வேண்டிய கடமை பெற்றோர்களிடம் தான் உள்ளது. எத்தகைய இயந்திரத்தனமான வாழ்கையோட்டமாக இருப்பினும் பிள்ளைகளுக்காக எமது நேரத்தில் சிறு பகுதியை நாம் ஒதுக்க வேண்டியது நமது கடமை. அந்த நேரத்தில் தமிழும் ஊட்ட வேண்டியது தலையாய கடமை.

ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழுக்கான பங்களிப்பு என்பது கட்டாயமானது. அவ்வகையில் இக் குழுமம் தனது பங்களிப்பை இந்த வழியிலும் செய்கின்றது. இதனை பயன் படுத்தி உங்கள் குழந்தைகளுக்கு தமிழை ஊட்டி அவர்களுக்கும் தமிழ் பால் பற்றும் ஆர்வமும் வரச் செய்வீர்களென்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

நன்றி!

ஔவை வேதம்....

No comments: