இவ் இழை மூலம் பட்டிமன்ற அறிவிப்புகள் வழங்கவுள்ளோம். பட்டிமன்றத்தில் பங்குபெற விரும்புகிறவர்கள் தங்கள் பெயர்களை தலைப்புக் கொடுத்ததும் எங்களுக்கு தெரியப்படுத்தினால் போதுமானது. நடுவரின் முடிவே இறுதியானது.
இக் குழுமத்தின் முதல் பட்டிமன்ற தலைப்பு:
தாலி பெண்ணுக்கு வேலியா அல்லது விலங்கா?
பட்டிமன்றத்தில் உரையாட விரும்புகிறவர்கள் தமது பெயர்களை எமக்கு அறியத்தரவும் . உங்கள் பெயர்களை பட்டிமன்ற கருத்தலை இழை மூலம் தெரியப்படுத்தவும். பட்டிமன்றம்
அன்பு கனிந்த தமிழ் பிரவாக நண்பர்களுக்கு!
தமிழ் பிரவாகக் குழுமப் பக்கங்களில் வரும் உங்கள் சொந்த ஆக்கங்கள் இனிமேல் தமிழ் பிரவாகத்தின் வலைப்பூவிலும் (http://thamizpiravakam.blogspot.com/) இடம் பெறும் என இதன் மூலம் அறியத் தருகிறோம். வேறு இணையத் தளங்களிலிருந்து வேறொருவரின்
படைப்புகளை ரசனைக்காக பிரவாகக் குழுமப் பக்கங்களில் நீங்கள் பிரசுரித்திருந்தால் அவை எமது வலைப்பூவில் இடம் பெறமாட்டாது என்பதையும்
இதன் மூலம் அறியத்தர விரும்புகின்றோம். உங்கள் சொந்த ஆக்கங்களில் குழுமப்பகுதியில் வெளிவந்த ஆக்கங்கள் மட்டுமே வலைப்பூவில் மலரும்.
நன்றி!வணக்கம்!
அன்புடன் சுவாதி.
நன்றிகள்!
என் கவிதைக்கு உயிர் கொடுத்து குயில் என்ற பட்டம் சூட்டி என்னை மகிழ்வித்த நண்பர்கள் ஸ்வாதி மற்றும் பால முரளிக்கு என் நன்றிகள்!
அதோடு எனது படைப்புகளை தமிழ் பிரவாகம் வலைப்பூவிலும் (http://thamizpiravakam.blogspot.com/) போட்டிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சியினையும்
மேலும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
நன்றி! நன்றி! நன்றி!
No comments:
Post a Comment