Friday, June 8, 2007

புதிய குறளலை!

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அந்தக் காலத்துக்கு மட்டுமல்ல நவ நாகரீகமும், நவீன விஞ்ஞானமும் வளரச்சியடைந்த இந்தக் காலத்துக்குக் கூடப் பொருந்தக்கூடியதாக இருக்கும் அரிய நூல் என்று சொல்வார்கள். உண்மை தான். திருக்குறளில் சொல்லப்படாத செய்தி்களே இல்லை என்றும் கூறுகிறார்கள். இது எத்தனை தூரம் உண்மை என்பதை ஆராய்வதே இவ்விழையின் நோக்கம்.

அத்துடன் எமது அங்கத்தினர்களில் சிலர் ஏன் திருக்குறளில் பிற் சேர்க்கை எதுவும் இணைக்கப்படக் கூடாது என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்? சேர்க்கலாமா கூடாதா என்பதை யார் தீர்மானிப்பது? அதையும் தமிழறிந்த வல்லுனர்களும் வாசகர்களும் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் புதிய குறள்களை உருவாக்கலாம். திருக்குறளில் இல்லாத செய்திகள் என்று யாராவது ஒரு புது விஷயத்தை அறிந்தால் இங்கே எங்களுடன் பகிரலாம். புதிய குறள்களை எழுத விரும்புபவர்களும் இங்கே எழுதலாம். பார்கலாம்... வாசகர்களும் தமிழ் விரும்பிகளும் அதை எப்படி வரவேற்கிறார்கள் என்று...

புதிய குறளலை!

No comments: